Monday 11 July, 2011

இந்து மதம் -8

                                                         
 அனைவருக்கும் ஏன் கிடைக்கவில்லை  வேதம் !

இன்று பல மதத்தில் சிறு குழந்தையிடம் கூட அவர்கள் மதத்தின் வேதங்களை படிக்க செய்கிறார்கள் ...அனால் நம் இந்துமதத்தில் மட்டும் என் அனைவரிடமும் வேதம் இல்லை என்று வருத்த படும் பலபேர் நம் இந்துமதத்தில் இருக்கின்றார்கள் ...முதலில் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன் சிறு வயது முதல் பைபிள் படித்த கிறிஸ்துவர்கள் எல்லாம் கிறிஸ்து போல் வாழ்கின்றார்களா ? அல்லது சிறு வயது முதல் குரான் படித்த அணைத்து முஸ்லிம்களும் நல்ல ஒழுக்கங்களோடு இருகின்றார்களா ?

ஒரு எடுத்துகாட்டு ....

பள்ளி முடிந்து மாலை வேளையில் ஓடி விளையாடும் சிறுவனிடம் பள்ளி பாட புத்தகத்தை படிக்க சொன்னால் அவன் படிக்க மாட்டான் ,பெற்றோர்கள் கண்டித்து படிக்க சொன்னால் அவன் அந்த புத்தகத்தை படிப்பது போல் ஏமாற்றுவான் , அவன் எண்ணமெல்லாம் அந்த விளையாட்டிலே இருக்கமே தவிர அந்த புத்தகத்தில் என்ன விசயம் இருக்கு என்று அவனுக்கு தெரியாது ...

அந்த மாணவனின் நிலையில் தான் நாம் இன்று இருக்கிறோம் .அதாவது இன்று (கலியுகத்தில் ) நிரந்தரமில்லாத பணம், பொருட்கள் , நிலையில்லாத சுகங்களின் மீதே நம் மனம் அலைபாய்கிறது ...அதற்கேற்றார் போல் இறைவனும் நமக்கு பல சந்தர்பங்களை தருகிறான் அவற்றை பெறுவதிற்கு , என்று நாம் இந்த நிரந்தரமில்லாத பொருட்களை மறந்துவிட்டு எதுதான் நமக்கு நிரந்தர இன்பம் என்று யோசிக்கும் தருவாயில் தான் நமக்கு இறைவன் அளித்த வேதங்களை படிப்பதற்கு இறைவன் முலாமாகவே வாய்ப்பு கிடைகின்றது ....அபோதுதான் அந்த வேததிர்கான பொருள் நமக்கு விளங்கும் ....அதை விடுத்து உலக பற்றுகளில் நம் ஆசையை விடாமல் நாம் எத்தனை தடவை வேதங்களை படித்தாலும் அதன் அர்த்தம் நமக்கு விளங்காது ...


பிராமணர்களால் தான் வேதம் நமக்கு கிடைக்க வில்லை என்று நாம் குறை கூறுகிறோம் .." இறைவைனின் வேதத்தை நமக்கு கிடைக்காமல் தடுப்பதற்கு இவர்கள் யார் ? " இந்த பொருள் இவனுக்கு இந்த நேரத்தில் கிடைக்கும் என்று இறைவன் நினைத்த பிறகு அதை தடுக்கும் உரிமை யாருக்கு உண்டு ? ...

எனவே நமக்கும் வேதம் கிடைக்கும் ...அதற்கான நேரம் வரும்பொழுது ...

குரான் நல்லவற்றை தான் போதிக்கிறது அதை நாங்கள் முழு அர்த்தத்தோடு சிறு வயதில் முதல் படித்து வருகிறோம் என்று பெருமிதமாய் அவர்கள் கூறினால் அவர்கள் நல்ல ஒழுக்கத்தோடு இருப்பார்கள்.....உலகில் எங்கும் கலவரமே இருக்காது......

அதைபோல் சிறு வயதில் முதல் நாங்கள் முழு அர்த்தத்தோடு பைபிளே படித்து வருகிறோம் என்று கிருஸ்துவர்கள் கூறினால் மட்ரவர்களை மதம் மாற்றாமல் முதலில் இவர்கள் திருந்தி உலகில் எத்தனையோ மதர் தெரேசாவாக மாறி இருப்பார்கள்..

அது ஏன் நடக்கவில்லை ...யாருக்குமே முழுமையான , இறைவனின் உண்மையான வேதம் கிடைக்க வில்லை ...சற்று சிந்திக்க வேண்டும் அர்ஜுனனுக்கு கிருஷ்ணரால் கீதை எப்ப உபதேசிக்க பட்டது ...ஒரு போர்க்களத்தில் தானே ஏன் வேறு எங்கு வைத்தாவது உபதேசித்திருக்க வேண்டியது தானே ஏன் போர்களத்தில் உபதேசிக்க பட்டது....ஏனென்றால் அது தான் சரியான இடம் அதுதான் சரியான தருணமும் கூட ....செய்வதறியாமல் எல்லாவற்றயும் விடுத்து கிருஷ்ணனை சரண் அடைந்தான் அர்ஜுனனன், அந்த தருணத்தில் தான் கீதை அவனுக்கு  உபதேசிக்கப்பட்டது ...ஒருநாள் நமக்கும் கிடைக்கும் அதற்கான தகுதி நமக்கு வரும் பொழுது ...நம் அனைவரின் கையிலும் ஒரு நாள் பகவத் கீதை இருக்கும் அதற்கான மன பக்குவம் நமக்கு கிடைக்கும் பொழுது ....


தொடரும்...