Thursday 25 August, 2011

இந்து மதம் -10

   
இறைவன் நேரில் வருவானா ?

        " பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம் தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே " இது இறைவனாகிய கண்ண பெருமான் கீதா உபதேசத்தில் அர்ஜுனனுக்கு கூறியது . அது என்னவென்றால் நல்லவர்களை காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் , தர்மங்களை நிலை நிறுத்துவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கின்றேன் என்று கிருஷ்ணன் கூறுகிறார். அவ்வாறு இறைவன் இந்த பூமியில் பத்து அவதாரம் எடுத்தார் என்கிறது இந்து மதம். சில சமயம் நம்மை தர்ம நெறியில் வழிநடத்த  பல மகான்களையும் இந்த உலகிற்கு அனுப்பி வைக்கிறார் அவசியம் இருந்தால் தானும்  வருகிறார்.
                  ஆனால் மற்ற மதங்களோ இறைவன் எந்தவொரு அவதாரமும் எடுப்பதில்லை அவர் தன் தூதர்களை மட்டும்த்தான் அனுப்புவார் என்கிறது . அதாவது இறைவன் ஒரு அதிகார தோரணை கொண்டவன் போல் சித்தரிகின்றனர். ஆனால் இந்துமதமோ இறைவன் நம்மை அரைவனைப்பதில் தாய் என்றும் , நம்மை வழிநடத்துவதில் ஒரு தந்தை என்றும் தன் நாட்டு  மக்களை காக்கும் மன்னனை போலவும் , வெற்றியிலும் தோல்வியிலும் பங்கேற்கும் ஒரு நல்ல நண்பனை போலவும் இறைவனை சித்தரிகின்றது.
                   நமக்கு  ஒரு துன்பம் என்றால் ஓடி வருபவனே இறைவன்..!!! அதைவிடுத்து  எந்த ஒரு சூழ்நிலையிலும் என் நிலையில் இருந்து  நான் இறங்கி வரமாட்டேன் என்று  கூறுபவன் இறைவன் இல்லை . ஆனால் அவன் நம்மை காக்க எந்த ரூபத்திலும் வருவான் நாம் தான் அவனை அறிவதில்லை ..!!!! அறிந்து கொள்ள முயல்வதும்  இல்லை...!!!!!
             மன்னன் என்பவன் மக்கள் எப்படி வாழவேண்டும் என்று சட்டம் உருவாக்கினால் மட்டும் போதாது அதன் படி வாழ்ந்து காட்டி மற்ற மக்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டும்.அதே போலத்தான் தர்ம நெறியில் நம்மை வாழ சொல்லும் இறைவனும் இந்த பூவுலகில் அவதரித்து அதன் படி வாழ்ந்தும் நமக்கெல்லாம் ஒரு உதாரணமாகவும் இருகின்றார் என்கிறது இந்து மதம்.
           ஒரு முறை ஒரு மன்னன்  அவருடைய மகன் மற்றும் அவருடைய அமைச்சர் ஆகியோர் ஒரு கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள் அப்போது அந்த மன்னனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது அந்த
சந்தேகத்தை தீர்க்கும்படி தன் அமைச்சரிடம் கேட்டார் ..அது என்ன சந்தேகம் என்றால் மக்களை காப்பாற்ற இறைவன் என் நேரில் வரவேண்டும் அவருக்குதான் சக்தி இருக்கிறதே எனவே எதாவது ஒரு தூதரை  அனுப்ப வேண்டியதுத்தானே அவர் நேரில் வரவேண்டியதன் அவசியம் என்ன ? என்று கேட்டார் . அதற்க்கு அந்த அமைச்சர் என்ன விளக்கம் கொடுத்தும் அந்த மன்னன் புரிந்துகொள்ள முயலவில்லை ..பொறுமையை இழந்த அந்த அமைச்சர் திடிரென்று மன்னனின் மகனை ஆற்றில் தள்ளி விட்டார். இதை கண்ட மன்னன் உடனே ஆற்றில் குதித்து தன் மகனை காப்பாற்றினார்...மகனுடன் படகில் ஏறிய மன்னன் அமைச்சரை பார்த்து உமக்கு என்ன புத்தி பேதலித்து போனதா ?.. யாரங்கே ..!!! இந்த அமைச்சரை கைது செய்யுங்கள் என்றார். அதற்க்கு அந்த அமைச்சர் மன்னா !!! சற்று பொறுமையாய் இருங்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு இப்ப ஒரு தீர்க்கமான பதில் கிடைத்து விட்டது என்றார்." என்ன உளறுகிறீர் ?"  என்றார் மன்னன் ...அதற்க்கு அமைச்சர் மன்னரே உங்களுடைய மகன் நீரில் விழுந்த பொழுது நீங்கள் என் ஆற்றி விழுந்து உங்கள் மகனை காப்பாற்றினீர்கள்..அதற்கு மன்னன் " என்ன மடத்தனமாக பேசுகிறீர் ? என் மகனை நான் காப்பாற்றாமல் வேற யார் காப்பாற்றுவார் "...அதற்க்கு அமைச்சர் மன்னரே எந்த வேலை என்றாலும் அதை செய்ய காவலர்களை ஏவும் நீங்கள் உங்கள் மகன் தண்ணீரில் விழுந்த பொது மட்டும் ஏன் காவலர்களை ஏவாமல் நீங்கள் ஆற்றில் குதித்தீர்கள் என்றார்...அதற்க்கு மன்னன் அமைச்சரே விழுந்து என் மகன் அல்லவா அவன் தண்ணீரில் துடிப்பதை பார்த்து கொண்டு என்னால் இருக்க முடியவில்லை உடனே நானும் விழுந்தேன் என் மகனை காப்பாற்றினேன் இதில் என்ன தவறு என்றார் .
               உடனே அமைச்சர் மன்னா இப்போது புரிகிறதா இறைவனும் அப்படிதான் அவன் படைத்த எல்லா உயிருக்கும் அவனே
தாயும் , தந்தையும் ஆவான் . நமக்கு ஒரு துன்பம் என்றால் நம்மை காப்பாற்ற அவனும் இந்த பூவுலகில் அவதரிக்கின்றான் என்றார்.

தொடரும் ,
                                                            

Tuesday 9 August, 2011

இந்து மதம் -9

       
இறைவன் எப்படிபட்டவன் ...!

  
              இஸ்லாம் மதம் மற்றும் கிறிஸ்துவமதம் இறுதி தீர்ப்பு நாளில் இறைவன் தீர்ப்பளித்து  ஒரு சிலரை  சொர்கத்திற்கும் ஒரு சிலரை நரகத்திற்கும் அனுப்புவார்  என்று அவர்களின் பைபிள் மற்றும் குரான் கூறுகிறது. ஆனால் நம் இந்து மதம் என்ன கூறுகிறது என்று ஒப்பிட்டு பார்ப்போம்.

         அதாவது இறைவன் (அல்லா / கர்த்தர் ) மனிதர்களை படைத்து அவர்கள் வாழும் காலத்தில் செய்த நன்மைகளையும் தீமைகளையும் வைத்து ஒருசாராரை சொர்கத்திற்கும் ஒருசாராரை நரகத்திற்கும் அனுப்புகிறார் ..ஆனால் இந்துமதமோ ஒருவனுக்கு நிரந்தர சொர்கமோ அல்லது நிரந்தர நரகமோ கிடையாது  என்கிறது..அப்ப எதுதான் நமக்கு நிரந்தர இன்பம் என்று பார்க்கும் பொழுது மனிதனாக பிறந்த ஒருவனுக்கு நிரந்தர இன்பம் என்பது இறைவனை அடைவதே என்கிறது இந்து மதம்..ஆனால் அது ஒரே பிறவியில் சாத்தியமா என்றால் சாதாரண மனிதர்களால் முடியாது ..ஒருவன் தான் செய்யும் பாவங்களால் பல்வேறு பிறவிகள் எடுக்க நேர்கிறது ..ஒருவன் இறுதியாக இறைவனை  அடைந்த  பிறகு மட்டுமே  அவனுடைய பிறவி முற்று பெறுகிறது .ஒருவனை படைத்தால்  மட்டும் போதாது அவனை திருத்தி மீண்டும் தன்னில் சேர்த்துகொள்ளும் கடமையும்  அந்த இறைவனுக்கு உண்டு என்கிறது  ஹிந்து மதம் .

 இறைவன் ஒருவனை நிரந்தரமாக நரகில் தள்ளுவதற்கு இஸ்லாமியர்கள்  மற்றும் கிறிஸ்துவர்கள் சொல்லும் காரணம் அவன் கடைசி வரை திருந்தவில்லை ( இதில் திருந்தவில்லை என்பது அவர்கள் மதத்தில் இணையவில்லை என்பதும்  ஒரு காரணம் ). ஆனால் அதிலும் ஒரு கேள்வி எழுகிறது   அவன் (மனிதன்) திருந்தவே மாட்டான்  என்று அவனை நரகில் தள்ளுவதற்கு பதில் அவனை படைத்திருக்காமல் இருந்துருக்க வேண்டியதுதானே ? அவன் இறுதி வரை திருந்த மாட்டான் என்று எல்லாம் வல்ல அந்த ஏக இறைவனை அவனை படைக்கும்  முன்பே தெரியாதா ? பிறகு ஏன் அவனை படைக்கவேண்டும் ..!..அவனை ஏன் நிரந்தர நரகில் தள்ளவேண்டும் ? இறைவன் அவ்வளவுகொடூரமானவனா என்ன ?
     
     கெட்டவனுக்கு நரகில் துன்பப்பட மேலும் மேலும் அவனுக்கு உடம்பும் சதையும் கொடுக்கும் அல்லா/கர்த்தர்  அவன் திருந்துவதற்கு மீண்டும்  ஒரு சந்தர்ப்பம் ஏன் கொடுப்பது  இல்லை ?  பிறகு  ஏன் அவனை கருணையுள்ளவன் என்று கூறவேண்டும் ?
  
    ஒருவனை நரகில் தள்ளுவதற்கு தன் ஒட்டுமொத்த சக்திய கொண்டு அவனை  உயிர் பெற செய்யும் அல்லா/கர்த்தர் அதே சக்தியை கொண்டு அவன் வாழும்போது " நீ  திருந்துவாயாக " என்று கூறி ஒரே நொடியில் அவனை நல்லவனாக மாற்ற வேண்டயது தானே ? 
ஏன் செய்வது  இல்லை ?...இவ்வாறு பல கேள்விகள் எழுகிறது .

  எப்படி ஒரு பிள்ளையை பெற்றவனுக்கு அவனை நல்ல ஆளாக்கும் கடமையும்  ஒரு தந்தைக்கு உள்ளதோ  ...! அதைபோல் படைத்த உயிர்களை நல்வழிபடுத்தி மீண்டும் தன்னில் சேர்த்துகொள்ளும் கடமையும் உள்ளது அந்த  இறைவனுக்கு ..! மகன்  திருந்த வில்லை என்று அவனை வாழவும் விடாமல் சாகவும் விடாமல்  எந்தவொரு தந்தையும் தன் மகனை சித்திரவதை செய்வதில்லை அதே போல்தான் இறைவனும் என்கிறது இந்து மதம் .

 எனவே  ஒரு ஆத்மாவின் இறுதிநிலை என்பது நிரந்தர சொர்கமும் இல்லை நிரந்தர நரகமும் இல்லை , முக்தியே அதன் இறுதிநிலை என்கிறது ..மனிதனாக பிறந்த  ஒருவன் முக்தி அடைவதே மெய்யான இன்பம் என்கிறது  , முக்தி என்றால் இறைவனை அடைதல் , ஒருவன் இறைவனை அடைந்த  பிறகு அவனுக்கு பிறவியில்லை , உடல் இல்லை , பசி இல்லை , நோயில்லை . இறைவனால் படைக்க பட்ட எல்லா உயிரும் ஒரு நாள் இறைவனை கண்டிப்பாக அடையும் என்கிறது ..! அதுவும் அவன் முயற்சியை கொண்டே ..!
           
     ஆனால் இஸ்லாம்/ கிறிஸ்துவ  மதம்   ஒருவனின் இறுதிநிலை சொர்கமே  அல்லது நரகமே என்கிறது ..  அதாவது ஒரு மனிதனுக்கு சொர்கத்தில் நிரந்தர ஆறும் , குராயாத உணவும் , ஆசைக்கு ஒரு துணையும்  கிடைக்கும் என்கிறது ..மீண்டும் அது ஒரு போக வாழ்க்கைக்கே முக்கியத்துவம் தருகிறது ...! ஆனால் இறைவனை அடைந்தவனுக்கு ஆறும் தேவை இல்லை , பசிக்கு உணவும் தேவை இல்லை , இச்சைக்கு துணையும் தேவை இல்லை ...!

ஒரு சின்ன கதை ..!  ஒரு ஞானி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார் அப்போது அந்த ஆற்று நீர் ஒரு  தேளை இழுத்து சென்றதை பார்த்து அதை காப்பாற்றும்  பொருட்டு அதை தன் கையில் பிடித்தார் அந்த தேள் உடனே அவரை கொட்டியது அதை பார்த்த அந்த ஞானியின் சீடர் குருவே அந்த தேளை காப்பாற்ற நினைத்த உங்களையே அது கொட்டிவிட்டது பிறகு அதை ஏன் உங்கள் கையில் பிடிக்கிறீர்கள் அதை விட்டு விடுங்கள் என்று கூறினார் அந்த  சீடர் ..உடனே குரு கூறினார் சீடனே தேளின் குணம் கொட்டுவது அது தன் கர்மத்தை சரியாக செய்கிறது ..மனிதராகிய நம் குணம் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அந்த  தேளை காப்பாற்றுவது ..!அதை தான் நான் செய்கிறேன் என்றார் ...! இறைவனால் ஞானம் பெற்ற ஞானிக்கே இந்த குணம் என்றால் இறைவனின் குணம் எப்படி இருக்கும் ?  அவன் ஞானிகேல்லாம் ஞானி ...! அவன் அறியாத சூட்சமமா என்ன ...!

தொடரும் ...