Friday 16 December, 2011

இந்துமதம் -14


                                                                  



பரமாத்மாவின் வடிவம் என்ன ? (1)

          நமது இந்துமதத்தில் இறைவனின் வடிவம் ஆன்ம( ஜோதி / ஒளி ) வடிவம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன என்பதையும் அது எப்படி என்பதையும் நாம் இந்த பதில் காண்போம்.

              பல சித்தர்களும் , ரிஷிகளும் ,ஞானிகளும் , வள்ளலார் மற்றும்  அய்யா வைகுண்டர் போன்றவர்கள் இறைவன் ஜோதி வடிவானவன் என்று கூறியுள்ளார்கள்.சரி முதலில் இறைவனுக்கு வடிவம் உண்டா என்பதை முதலில் பார்போம் . எந்த ஒரு பொருளையும் உருவாக்க வேண்டும் என்றால் முதலில் உருவாக்கும் கருவி , உருவாக்கும் நபர் , மூல பொருள் என்ற மூன்றும் முக்கியம். இவைகளில் ஒரு  பொருளை உருவாக்க மூல பொருள் இல்லை என்றால் எந்த ஒரு பொருளும் உருபெற முடியாது , எதையும் உருவாக்கவும் முடியாது. அப்படி இருக்கையில் நமெக்கெல்லாம் உருவம் கொடுக்கும் இறைவனும் அங்கே ஒரு உருவாக்கும் நபராக இருந்தால் தானே நாம் மற்றும் இந்த அண்டங்கள் வடிவம் பெறுவது  சாத்தியம். நமது வேதங்களின்  படி நமக்குள் இருக்கும் ஆன்மா என்பது பரமாத்மாவில் இருந்து தோன்றிய ஒரு சிறிய தீ பொறி போன்றது. இந்த அண்டங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் பரமாத்மாவை மூல பொருளாய் கொண்டு தோன்றியவை. எப்படி மண்ணில் இருந்து  பல மண்பாண்டங்கள் உருவாகிறதோ அதே போல்தான் நம்முடைய தோற்றங்களும். சரி அங்கே மண் என்ற மூல பொருள் இல்லை என்றால் மண்பாண்டங்கள் தோன்றுவது எப்படி . அதேபோல் மூல பரம்பொருள் ஒரு வடிவமும்  இல்லாமல் இருந்தால்  நாம் வடிவம் பெறுவது எப்படி ???? . நம் முன்னோர்கள் இறைவன்  மூன்று நிலைகளில் இருப்பதாக கூறுகின்றனர் அவை ரூபம் , அருபம் , அருரூபம் .   

            ரூபம் என்றால் இறைவன் தற்காலிகமாக  ஒரு வடிவத்தை பெறுவது , எடுத்துகாட்டாக இந்த பூமியில் தர்மத்தை காக்க  இறைவன் எத்தனையோ அவத்தாரம் அவ்வபோது எடுத்துள்ளார் அல்லவா ??? அதைத்தான் இறைவனின் ரூபம் நிலை என்கிறோம் . ஆனால் இந்த நிலை நிரந்தரம் அல்ல . பிறகு அருபம் , அருபம் என்றால் எந்த ஒரு வடிவமும் இல்லாமல் இருப்பது இது இறைவன் எந்த ஒரு தொழிலையும் செய்யாமல் இருக்கும் நிலை .இது இந்த உலகம் , அண்டம் மற்றும் உயிரினங்கள் அனைத்தும்  அழிந்து ஒடுங்கி இருக்கும் நிலை. ஆனால் இறைவன் எந்த ஒரு தொழிலையும் செய்யாமல் இருப்பதை விரும்பவில்லை . இதற்க்கு காரணம் நாம் பிரம்ம சூத்திரத்தில் காணலாம். பகவத் கீதையில் கூட கிருஷ்ண பரமாத்மா இதை பற்றி கூறியுள்ளார். எனவே இந்த நிலையும் தற்காலிக நிலையே ஆகும். சரி அப்ப இறைவன் எந்த நிலையில் தான் இருக்கிறார் என்றால் உருவமும் அல்லாமால் , அருபமும் அல்லாமல் இரண்டும் கலந்தே உள்ள நிலையில்த்தான்  படைத்தல் காத்தல் ,அழித்தல் என தன் தொழிலை செய்து  கொண்டிருக்கிறார் என்கின்றது நம் வேதங்கள். சரி இனி அந்த அருரூபம் நிலை எப்படி பட்டது என்று பாப்போம். அதை எப்படி கண்டு  பிடிப்பது ??? ஒன்று நாம் நம் சொந்த முயற்சி மூலம் கண்டு  அறியலாம் அல்லது அதனை கண்டு அறிந்தவர் என்ன கூறியுள்ளார்கள் என்பதை கேட்டு அறிந்து கொள்ளலாம். ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒன்று சொல் புத்தி இருக்க வேண்டும் அல்லது சுய புத்தி இருக்கவேண்டும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நமக்கு இரண்டுமே இல்லை என்பதுத்தான் உண்மை. சரி இனி நம் முன்னோர்கள் பரமாத்மாவின் வடிவம் என்ன என்பதை பற்றி என்ன கூறியுள்ளார்கள் என்று ஆராய்வோமா ?.ஏன் என்றால் நம் முன்னோர்களான ஞானிகள் , ரிஷிகள் , மற்றும் சித்தர்கள் இறைவனை கண்டு அறிந்திருகின்றார்கள். அவர்கள் மட்டும் என்வாறு கண்கொண்டு பிடித்தார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் வரும் ?. அவர்கள் ஒன்றும் நம்மை போல் முக்கை சுத்தி தலையை தொடுபவர்கள் அல்லர். நாம் நம் முன்னோர்கள் இறைவனை பற்றி என்ன கூறியுலார்கள் என்று ஆராய்ந்தால் அவர்கள் அனைவரும் இறைவன் ஒளி (ஜோதி) வடிவானவன் என்று கூறுகிறார்கள். அது எப்படி என்பதையும்  காண்போம்.

              நாம் நமது வேதங்களை புரட்டி பார்த்தால் நாம் என்பது நமது உடல் அல்ல ஆன்மா என்றே கூறகிறது. ஆன்மா என்றால் என்ன ? எளிதாக சொல்ல வேண்டும் என்றால்  உயிர் என்று சொல்லலாம், சரி ஒருவன் நடமாடும் மனிதன் அல்லது பிணம் என்று எதை வைத்து கூறுகிறோம்..உடலை வைத்தா ? அல்லது உயிரை வைத்தா ? . உயிரை வைத்துதானே ..!!! உடலில் உயிர் இருந்தால் அவன் மனிதன்... இல்லை என்றால் அது பிணம் அல்லவா. சரி அந்த ஆன்மாவின் தோற்றம் எங்கிருந்து வருகிறது என்று பார்போம். பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார் ஆன்மாவின் பிறப்பிடம் பரமாத்மா என்கிறார். ஒவ்வொரு  ஆன்மாவும் பரமாத்மாவின் அம்சம் என்கிறார். எத்தனையோ ஆன்மா என்னில்  இருந்து பிரிந்தாலும் நான் எனது இயல்பில் இருந்து சிறிதளவும் குறைவதில்லை என்கிறார். அப்ப நமக்குள் இருக்கும் ஆன்மா என்பது அந்த பரமாத்மாவின் அம்சம் என்பது தெளிவாகிறது அல்லவா இங்கு.  சரி அந்த ஆன்மாவின் நிலையை பற்றி கிருஷ்ண பரமாத்மா என்ன கூறுகிறார் என்றால் அதை நீரால் கழுவ முடியாது, கத்தியால் கிழிக்க முடியாது , தீயால் எரிக்க முடியாது என்கிறார் . அப்படியென்றால் அது என்ன வடிவமாக இருக்கும் என்று குழம்புவது தெரிகிறது !!! ...வருவோம் ஒவ்வொன்றாக  அலசி ஆராய்வோம். நமக்கு ஒருவிஷயம் மட்டும்  தெளிவாகிறது அது .. நம்முடைய ஆத்மா என்பது  பரமாத்மாவின் அம்சம் என்று.  அப்ப நம்முடைய ஆத்மாவை அறிந்தால் நாம் பரமாத்மாவை அறிய முடியும்தானே . பொதுவாக நம் வீட்டில் நம் அம்மா சாதம் வெந்துவிட்டதா என்பதை எப்படி கண்டுபிடிப்பார் ? அனைவருக்கும்  தெரிந்ததுதான்  ஒரு சோற்றை பதம் பார்த்தாலே போதும்தானே . இதைத்தானே நம் முன்னோர்கள் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கூறியுள்ளார்கள் . அதன் படி நாம் நமது ஆத்மாவை அறிந்துகொண்டாலே அந்த பரமாத்மாவை அறிந்து கொள்ள முடியும். இனி நாம் நம் ஆத்மாவின் வடிவம் என்ன என்பதையும் அதை எப்படி அறிவது என்பதயும் அடுத்த பதிவில் ஆராய்வோம் !!!! காத்திருங்கள் !!!!!!


( தொடரும் )

Tuesday 6 December, 2011

இந்துமதம் -13

                                                        


எத்தனை எத்தனை நாமங்கள் ?

   நண்பர்களே இன்று நாம் இந்த தலைபிற்க்கு போகும் முன் ஒரு நல்ல அரசியல்வாதி மற்றும் சிறந்த மனிதர் என்று எல்லோராலும் போற்ற பட்ட ஒருவர் கூறிய கறுத்த முதலில் கூற விரும்புகிறேன் அந்த கருத்து இதோ ...

"பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்கு பி.எச்டி யா கொடுக்குறாங்க.பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம்! பக்தி வேஷம் போடுறது நாலு பேர் பாராட்டணுமிங்கறத்துக்காகத்தான்.ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலா மில்லையா?மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன் அக்னி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமிகளைச் சொன்னான். நம்மநாட்டு பூர்வீகக் குடிமக்களான திராவிடர்கள் காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் இவன் கிட்டே வந்து என் பேரு இதுதான்னு சொன்னது? "
   
        இதை யார் கூறியிருக்க வேண்டும் என்று சிந்திக்கின்றீர்களா ? சிரமம் வேண்டாம் நானே கூறுகிறேன் இதை சொன்னவர் வேற யாரும் இல்லை கல்விக்கு கண் திறந்தவர் என்று எல்லோராலும் போற்ற பட்ட பெருந்தலைவர் காமராஜர் தான் . இதில யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை. அவர் போலியாக பக்திவேசம் போடுபவர்களை மட்டுமே விமர்சிக்கிறார். சரி எது எப்படி போனாலும் எனக்கு உறுத்தியது அவர் கூறிய ஒரு வார்த்தைத்தான் அது என்ன வென்றால் " எந்தக் கடவுள் இவன் கிட்டே வந்து என் பேரு இதுதான்னு சொன்னது? " என்ற ஒன்றுத்தான். சரி இதை ஏன் ஒரு தலைப்பாக எடுக்ககூடாது என்ற எண்ணம் தோன்றியது எனக்கு .சரி இனி தலைப்பிற்கு போவோம்.

             பொதுவாக நமது இந்துமதத்தில் கடவுளுக்கு பல பெயர் இருக்கின்றது .அந்த பெயர் அனைத்தும் நாம் சூட்டியதா அல்லது காமராஜர் கேட்டது போல் கடவுளே தனக்கு இதுதான் பெயர் என்று சூட்டியதா என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் மனிதனை தவிர எந்த ஒரு பொருளாவது தனக்கு இதுதான் பெயர் என்று நம்மிடம் என்றாவது கூறியது உண்டா ? பிறகு அவற்றுக்கெல்லாம் பெயர் வைத்தது யார் ?  நாம் தானே ? எதற்காக பெயர் வைத்தோம் நம்மை மற்றவைகளில் இருந்து வேறுபடுத்தி காட்டத்தானே ? இப்படி எல்லாவற்றுக்கும் பெயர் வைத்த நாம் தான் இறைவனுக்கும் பல பெயர்களை வைத்தோம். சரி ஒரே இறைவனுக்க இத்தனை பெயர்களை வைத்தோம் என்றால் இல்லை ஒவ்வொரு கடவுளுக்கும் ஆயிரம் ஆயிரம் பெயர்களை வைத்தோம். இப்போது பலருக்கும் ஒரு கேள்வி எழும் எல்லாம் மதமும் ஒரே கடவுள் என்று கூறும்பொழுது இந்து மதம் மட்டும் ஏன் பல கடவுள்  மற்றும் பல பெயர்களை  கொண்டுள்ளது என்று . இதற்க்கு நான் ஏன் ஏற்கனவை தனி பதிவு போட்டுள்ளேன் இருந்தும் இங்கும் நான் அதை விளக்க விரும்புகிறேன். ஓடும் ஆற்றில் இருந்து ஒரு டம்ளரில் தண்ணீரை பிடித்து இதான் தண்ணீரின் வடிவம் என்று கூறுவது எவ்வளவு முட்டாள் தனமோ அதை போலத்தான் இதுதான் கடவுளின் வடிவம் மற்றும் பெயர் என்று கூறுவது. ஏன் என்றால் ஆற்று தண்ணீரை வட்ட பாத்திரத்தில் பிடித்தால் அது வட்ட வடிவம் பெரும் அதை போல் ஒரு சதுர பாத்திரத்தில் பிடித்தால் சதுரம் வடிவம் பெரும் பிறகு எப்படி  இதுதான் தண்ணீரின் வடிவம் என்று நாம் ஆணித்தரமாக கூற முடியும்?.  நாம் பிடிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற போல் வடிவம் தரும் தண்ணிரை போலத்தான் இறைவனும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பமான வடிவம்  இப்படியாக தோன்றியதுதான் பல கடவுள். நாம் எந்த பாத்திரத்தில் பிடித்தாலும் அந்த தண்ணீரின் வடிவம்தான் வேறே தவிர அதல் இருக்கும் தண்ணீர் ஒன்றுதான். நாம் இறைவனை எந்த வடிவில் வழிபட்டாலும் அந்த இறைவன் ஒருவனே என்பதுதான் உண்மை.

                                  சரி இனி பல பெயர்களுக்கு வருவோம். இதற்கும் ஒரு உதாரணத்தை எடுத்துகொள்வோம் ....தங்க கட்டியை  எடுத்துகொள்வோம்  மனிதன் தன் காது ,கை , கழுத்து மற்றும் மூக்கில் அணிகலன்களாக அணிய தங்கத்தை உருக்கி விருப்பதிர்க்கேற்றாற்போல் வடிவமைக்கிறான். பிறகு அவை அனைத்திற்கும் கம்மல் , வளையல் , மூக்குத்தி என பெயர்களை வைக்கிறான் எதற்காக ? , ஒவ்வொன்றையும் தனி தனியாக அடியாள படுத்திகொள்வதர்காக. இதே பெயர்கள் ஒவ்வொரு மொழிக்கும் வேறுபடுகிறது அல்லவா, இப்படியாக தங்கம் என்ற ஒன்றில் இருந்து வேறுவடிவம் பெற்று பலமொழிகளில் பல பெயர்களை பெறுவது போலத்தான் ஒரே கடவுளின் தோற்றம் வேறுபட்டு பல வடிவம் கொண்டு ஒவ்வொருவரின் விருப்பதிர்க்கேற்ற பல பெயர்களை பெறுகிறது. அதைபோல் எப்படி தோடு , வளையல் ,மூக்குத்தியை உருக்கினால் மீண்டும் தங்க கட்டியாக மாறுகிறதோ அதை போல் ஒரே பரமாத்மாவினுள் எல்லா வடிவங்கள் மற்றும் பெயர்களும் அடங்கிவிடுகிறது.

                         இப்போதும் சிலபேர் ஒரு கேள்வி கேட்பார்கள் அது என்ன கேள்வி என்றால் எல்லா பெயர்களும் ஒரே கடவுளை குறிக்கிறது என்றால் ராமர் கோவிலுக்கு சென்று பிள்ளையாரப்பா என்னை காப்பாற்று என்று கும்பிட்டால் ஏன் முட்டாள் என்கிறீர்கள் என்று ...அவர்களிடம் ஒரு கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன் ராமரை பார்த்து பிள்ளயார் என்று கூறினால் உங்களை முட்டாள் என்று கூறுவது மனிதனா அல்லது ராமனா ? ...கருவறையில் இருக்கும் கடவுள் உங்களை அப்படி கூறவில்லையே ..மாறாக மனிதன் தானே கூறுகிறான்.ஏன் என்றால் இவ்வாறு  பெயர்கள் வைத்தது அவன்தானே . வளையலை பார்த்து மூக்குத்தி என்றால் முட்டாள் என்று தானே கூறுவான் ஏன் என்றால் இரண்டிற்கும் வெவ்வேறு பெயர்கள் இருக்கிறது அல்லவா ?.எனவே மனிதன்தான் பெயர் மற்றும் வடிவங்களை கொண்டு வேறுபடுத்தி கொள்கிறானே தவிர இறைவன் வேறுபடுத்தி பார்ப்பதில்லை.
                            உதரணாமாக நீங்கள்  நாயை பார்த்து பன்றி என்று கூறினால் கோப படுவது  நாயா அல்லது மனிதனா ?...நாய்க்கு கூட தெரியாது தன் பெயர் நாய் என்று பிறகு ஏன் அது கோப பட வேண்டும். ஒருமுறை ஒரு நாத்திகனும் ஒரு ஆத்திகனும் விவாதித்து கொண்டிருந்தார்கள் ..விவாதம் உச்சத்தை தாண்டி அந்த நாத்திகன் கடவுளை பார்த்து நாய் என்றும் கழுதை என்றும் திட்ட தொடங்கினான்...இதை கேட்டு வருத்தம் அடைந்த அந்த ஆத்திகன் இறைவனிடம் " இறைவா இவன் உங்களை இப்படியெல்லாம் தூற்றுகிரானே உங்களுக்கு கோபம் வர வில்லையா என்று " அதற்க்கு இறைவன் கூறினார் " பக்தா உயிரினங்களில் இது மேல் இனம் இது தாழ்ந்த இனம் என்று வேறுபடுத்தி பார்ப்பது மனிதன் மட்டுமே ...இதற்க்கு இந்த பெயர் என்று கூறுவதும் மனிதனே...!!! நாயை பார்த்து நாய் என்று கூப்பிட்டால் நாயே கண்டுகொள்ளமால் இருக்கும் பொழுது எல்லா உயிர்களையும் சம நோக்குடன் பார்க்கும் நான் ஏன் அவன் கூறியதை கண்டு கொள்ள வேண்டும். மனிதா ! உயிரினங்களின் வடிவம் மற்றும் பெயரை  கொண்டு நீ வேறுபடுத்தி பார்க்கிறாய் நான் அதனுள் இருக்கும் ஆன்மாவை மட்டும் பார்கிறேன். எனவே எனக்கு அவன் கூறுவதை கண்டு கோபம் வருவதில்லை...வடிவம் மற்றும் பெயர்களை கொண்டு நீ வேறுபடுத்தி பார்பதினால் உனக்கு கோபம் வருகிறது " என்று கூறினார்.
                      
                           நண்பர்களே  எங்கும் பறந்து விரிந்து இருக்கும் பரமாத்மாவை இதுதான் பெயர் இதுதான் வடிவம் என்று நாம் நினைத்து சண்டை இட்டுகொல்லாமல் நமக்கு எது எளிதான வடிவமோ அல்லது எளிதான பெயரோ அதை கொண்டு இறைவனிடம்  நம் ஆத்மாவை லயிக்க செய்ய வேண்டும் என்கிறது இந்துமதம்...! இதைதான் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார் ,

யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஸ்ரத்த யார்சிதுமிச்சதி|
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம் ||7-21|| இதற்க்கு தமிழ் விளக்கம் ,

எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன்.

(தொடரும்)

Wednesday 9 November, 2011

இந்து மதம் -12

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் !!!!!!

  
                இந்த தலைப்பை படித்த உடனே எம் ஜி யாருடைய  பாட்டு ஒன்று எல்லோருக்கும் நினைவில் வரும் . அது என்ன பாட்டு என்றால் " கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ..ஒருத்தனுக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான் ". இந்த தலைப்பை நான் எடுத்ததன் காரணம் இருக்கிறது அதாவது ஒரு வறுமையில் வாடும் குடும்பத்தின் நிலைமையை  பார்த்தோ அல்லது நோயினால் அவதி படுபவர்களை  பார்த்து  அனைவரும் கூறும்  ஒரு வார்த்தை " அந்த கடவுளுக்கு  கண்  இல்லையா " என்று... இவ்வாறு சொல்லும்போது நானும் சில வேளை கடவுள் ஏன் இப்படி ஒரு சாராருக்கு அதிகமாய் கொடுத்து ஒரு சாராரை வறுமையில் வாட வைத்து வேடிக்கை பார்கிறார் என்று நினைத்ததுண்டு .
              ஒரு பல மொழி கேள்வி பட்டுருபீர்கள் அது " நல்லவருக்கு பெய்யும் மழை கேட்டவருக்கும் பொய் சேரும் " என்று ...இந்த உலகத்தில் நல்லவர் இருந்தாலும் சரி கெட்டவர் இருந்தாலும் சரி மழை என்பது இருவருக்கும் சேர்ந்து தான் பொழிகிறது இப்படியாக இறைவன் படைத்த  இந்த இயற்கையானது அனைவருக்கும் பொதுவாக இருக்கும் பொது  இறைவனுடைய கருணை என்பது எப்படி ஒருசாராருக்கு மட்டும் போகிறது என்று கூறமுடியும் ?. இதற்க்கு நம் இந்து மதம் என்ன விளக்கம் தருகிறது என்று பார்ப்போம்.
             அதாவது இந்த உலகில் ஒருவன் நன்மை அனுபவிப்பதும் தீமை அனுபவிப்பதும் அவன் செய்த கர்ம பலனாலே என்கிறது. கர்மம் என்றால் என்ன ? " கர்மம் " வேறுவிதமாக சொல்ல வேண்டும் என்றால் " உழைப்பு " . நீ இன்று நன்றாக உழைத்தாயானால் நாளை அந்த உழைப்புக்கேற்ற ஊதியம்  கிடைப்பது  உறுதி. சொல்லப்போனால்  நம்முடைய   ஒருவேளை சாப்பாட்டை  கூட அந்த உழைப்புதான் தீர்மானிகிறது அல்லவா. நாம் அதிகமாக சம்பாதிப்பது அல்லது குறைவாகவும் சம்பாதிக்க காரணம் நம்முடைய உழைப்புதான். இதில் வேறொருவருடைய சூழ்ச்சியோ அல்லது தந்திரமோ இல்லை .அதைப்போலத்தான் நம்முடைய அடுத்தடுத்த பிறவியில் படும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் நம்முடைய  கர்ம பலனே. மறு பிறவியில் நம்முடைய உடலமைப்பு கூட நாம் செய்த  கர்ம பலன் படியே அமைகிறது. ஜனனமும் மரணமும் நாம் செய்த கர்ம பலனை பொறுத்தே. இவ்வாறு இருக்கும் பொழுது என்னுடைய இந்த நிலைமைக்கு கடவுள்தான் காரணம் என்று நாம் பிதற்றுவது ஏன் ?. காரணம் நாம் நம்மை பற்றி அறியாததின் விளைவே. இதற்குதான் எல்லாம் அறிந்த ஞானிகள் நமக்குள் இருக்கும் ஆன்மாவை தேடு என்கின்றனர். நாம் நம் ஆன்மாவை அறிந்தால் மட்டுமே அதன் பல்வேறு நிலைகளை அறிய முடியும். ஒருவன் தன் ஆன்மாவை அறிந்துகொண்டால் இப்பிறவியில் பெரும் இன்பம் மற்றும் துன்பத்திற்கான காரணம் புரியும். அதை விடுத்து அடுத்தவர் மீது பழியை போடுவது சிறுபிள்ளை தனமானது .
            ஒரு சின்ன கதை ஒன்றை கூற விரும்புகிறேன் ..ஒரு ஊரில் மழை இல்லாமல் குளங்களெல்லாம்  வற்றிவிட்டது .குடிக்க நீர் கிடைக்கவே பெரும் திண்டாட்டம்தான். அந்த ஊரில் ஒரு கிழவியும் அவளுடய பேத்தியும் வசித்து வந்தனர் . ஒருநாள் திடிரென்று மழை பெய்தது அப்போது ஊரில் உள்ள அனைவரும் தங்களிடம் உள்ள பாத்திரத்தில் மழை தண்ணீரை பிடித்து வைத்து கொண்டிருந்தனர். இதை பார்த்த கிழவி தன் பேத்தியிடம் மழை நீரை ஒரு பாத்திரத்தில் பிடிக்குமாறு கேட்டால். ஆனால் பேத்தியோ விளையாட்டு ஆர்வத்தில் நான் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு ஓட முயன்றாள் ..உடனே கிழவி நீ ஒன்றும் செய்யவேண்டாம் அடுப்படியில் நான் கழுவி  வைத்த பாத்திரத்தை அப்படியே வெளியே வைத்துவிட்டு மட்டும் செல் என்றால் . பேத்தியும் கிழவி சொன்ன படியே வைத்து விட்டு சென்று விட்டால். பிறகு சிறிது நேரத்தில் மலையும் ஓய்ந்தது . பாத்திரத்தில் நிரம்பிய நீரை எடுக்க சென்ற கிழவிக்கு ஒரே அதிர்ச்சி ..ஏன் என்றால் பாத்திரமானது தலை கீழாக கவிழ்த்து வைக்க பட்டிருந்தது . இதை பார்த்த கிழவிக்கு ஆத்திரம் பீரிட்டு வந்தது உடனே பேத்தியை நோக்கி " அடியே பாதகத்தி என்ன முட்டாள் தனம் செய்தாய் .!!!! இப்படி பாத்திரத்தை கவிழ்த்து வைத்து மழை நீரை பிடிக்க முடியாமல் செய்து விட்டாயே என்று அடிக்க சென்றால் " உடனே பேத்தி சொன்னால் " நீ தானே அடுப்படியில் இருக்கும் பாத்திரத்தை எடுத்து வந்து அப்படியே வைக்க சொன்னாய் நானும் அப்படியேதானே செய்தேன் பிறகு ஏன் என்னை அடிக்க வருகிறாய் என்று கூறினாள். பிறகுத்தான் கிழவிக்கு புரிந்தது முந்திய நாள் பாத்திரத்தை கழுவி கவிழ்த்து வைத்தது.

      பார்த்திர்களா மழை என்னவோ அனைவருக்கும் பொதுவாய்தான் பெய்தது ஆனால் அந்த கிழவிக்கு மட்டும் நீர் கிடைக்க வில்லை ஏன் ? இது அந்த பேத்தியின் குற்றமா அல்லது கிழவியின் குற்றமா ? ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது இது அந்த மழையின் குற்றம் இல்லை . இந்த கதையை  போலத்தான் நமது பிறவி வாழ்க்கையும் ..அதாவது அந்த கதையில் வரும் கிழவி தான் நாம் அந்த கிழவியின் பேத்தித்தான் நம்முடைய கர்மா மற்றும் அந்த மழை தான் இறைவனுடைய அருள். ஒவ்வொரு பிறவியின் போதும் இன்பம் மற்றும் துன்பம் என்பது  நாமும் நாம் செய்த கர்மபலனை பொறுத்தே..!!  இதில் கடவுளின் குற்றம் என்பது சிறிதும் இல்லை எனவே  நாம் செய்த கர்மம் எப்படியோ அதன் படியே நம்முடைய பிறவியும் அமைகிறது. சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள் நெல்லை போட்டு திணையை அறுக்க முடியாது என்று . சில பேர் கேள்வி கேட்பார்கள் நாம் முற்பிறவியில் செய்த பலனை இந்த பிறவியில் ஏன் அனுபவிக்க வேண்டும் என்று  அவர்களுக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன் அதாவது முற்பிறவி , இப்பிறவி என்ற கணக்கெல்லாம் நமக்குதான் ஆனால் இறைவனுடைய  பார்வையில் நம்முடைய ஒவ்வொரு மரணம் மற்றும் ஜனனம் என்பது நாம் இரவு தூங்கி பகலில் எழுவது போல..சுருங்க சொல்லப்போனால் கிழிந்த ஆடையை மாற்றி புதிய ஆடையை அணிவது போல... ஒருவன் பகலில்  பலபேரை கொன்று  விட்டு  மறுநாள்  தூங்கி  எழுந்ததும் நான் நல்லவன் நான் யாரயும் கொலை செய்ய வில்லை பிறகு ஏன் காவல் துறை எனக்கு தண்டனை தருகிறது என்று கேட்டால் எப்படி இருக்குமோ அதை போலத்தான் இருக்கும் இவ்வாறு நாம் கேட்கும் கேள்வியும்... நாம் நாளை நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக இன்றே உழைப்பது போல நம்முடைய  பிறவிகள் நன்றாக அமைய இன்றே நல்ல கர்மங்களை செய்ய வேண்டும் என்று நம் இந்து மதம் வழியுறுத்துகிறது .....

 ( தொடரும் )                                                      

Monday 3 October, 2011

இந்து மதம் -11

                                                     
இறைவன் நம்மை எதற்காக படைத்தான் ?

            இந்து மதம் இறைவன் நம்மை படைத்ததன் காரணம் என்ன என்ற கேள்விக்கு  என்ன சொல்கிறது என்று பார்ப்போம். அதாவது இந்த பூமி மற்று எண்ணற்ற ஆண்ட சராசரங்களை படைத்து  அதில்  மனித , தாவர மற்றும் விலங்கினங்களை படைத்ததின்  நோக்கம் தான் என்ன ? நம்மை (படைப்பினங்கள்) வைத்து அவன் பெறுவது தான் என்ன ?என்று எழும்  கேள்வி பொதுவானதே, ஆனால் இதற்க்கு பதில் ஒவ்வொரு மதத்திலும் வேறுபடிகிறது. நம் இது மதம் கூறும் பதிலோ இறைவன் என்பவன் எதையும் எதிர்பாராதவன் எதையும் சார்ந்திராதவன் பிறர் இடத்தில் இருந்து எந்த தேவைகளும் எதிர்பாராதவன்  என்கிறது . அப்படி இருக்கையில் நம்மை ஏன் படைக்க  வேண்டும் என்ற கேள்வி எழுவதும் இயல்பானதே . அதாவது இந்த பிரபஞ்ச மற்றும் உயிர்களின்  படைப்பிற்கு முன் இறைவன் தனித்து இருந்தார் எனவும் அவர் தனியாக இன்புற விரும்பவில்லை எனவும் தன் இன்பத்திற்காக படைக்க பட்டவையே இந்த படைப்புகள்  என விளக்கம் தருகிறது. இங்கே இன்பம் என்பது தன் சுய லாபத்திற்காக மனிதர்கள் பெரும் இன்பம் இல்லை அதாவது தானும் இன்பம் அடைவேண்டும் மற்றும் தன்னை சார்ந்தவர்களும் தன்னோடு சேர்ந்து இன்பம் அடையவேண்டும் என்ற நோக்கில் படைக்க பட்டவையே இந்த பிரபஞ்சத்தின் படைப்புகள்  என்று கூறுகிறது. அதாவது ஒரு குழந்தை கடற்கரையில் விளையாடும்பொழுது மணலில் வீடு கட்டும் அதை தன் விருப்பதிர்ற்கு ஏற்றவாறு அமைக்கும் அந்த குழந்தையிடம் சென்று ஏன் இவ்வளவு கஷ்ட்ட பட்டு கேட்டுகிறாய் அதால் உனக்கு ஒன்றும் ஆகபோவதில்லை பிறகு ஏன் கெட்டுகிறாய் என்று கேட்டால் அது சொல்லும் சும்மா ஏன் சந்தோசதிர்க்காக விளையாட்டாக கெட்டினேன் என்று பதில் வரும் பின் வீட்டிற்கு செல்லும்போது அதை இடித்துவிடும் ஏன் இடித்தாய் என்று கேட்டால் சும்மா விளையாட்டாக கெட்டினேன்  இப்பொழுது இடிக்கிறேன் என்று பதில்வரும்.
                          அந்த குழந்தையின் காரணத்தை போலத்தான் இந்த பிரபஞ்ச படைப்புகள் மற்றும் பிரபஞ்ச அழிவுகளுக்கான காரணம்  என்கிறது இந்து மதம். அனால் மற்ற மதங்களோ இறைவனை வணங்குவதற்காகத்தான் நாம் படைக்க பட்டோம் என்கிறது. நாம் ஒன்றை மனதில் கொள்ளவேண்டும் நாம் இறைவனை வணங்குவதால் அதில் அவன் அடைய போகும் பயன்த்தான் என்ன ? அதாவது இறைவன் என்ன பேரும்  புகழுக்கும் அழைகிற சாதாரண மனிதனா ?  மனிதன் தான் தன்னை எல்லோரும் போற்ற வேண்டும் என்ற அகங்காரத்தோடு அழைகிறான் அப்படி இருக்கையில் நம்முடைய வணக்கத்தை இறைவன் எதிர் நோக்கி இருந்தால் சாதாரண மனிதனுக்கும் அவனுக்கும் உள்ள வித்யாசம் என்ன ?. பின் ஏன் நாம் அனைவரும் இறைவனை வணங்குகிறோம் ? சற்று சிந்தித்து பாருங்கள் நாம் இறைவனை எதற்காக வணங்குகிறோம் ? நம்முடைய தேவைகளுக்குதானே எனக்கு அதை கொடு இதை கொடு என்றுதானே வணங்குகிறோம் இந்த வணக்கத்தில் இறைவன் பெறும் பயந்தான் என்ன ? . பிறகு எதற்கான இறைவனை வணங்க சொல்லுகிறார்கள் நம் முன்னோர்கள் ? என்ற கேள்வி நமக்கு எழும்.
அதற்க்கு  ஒரு சிறிய வார்த்தை மூலம் பதில் சொல்லிவிடலாம்  அது என்னவென்றால் " நீருக்கு மீன் தேவை இல்லை ஆனால் மீனுக்கு நீர் தேவை ". எனவே வழிபடுதல் என்பது நமக்குதான் தேவையோலிய அதனால்  இறைவனுக்கு ஒன்றும் ஆக போவதில்லை என்பதுதான் உண்மை .
                         நாம் வாழ  இந்த உலகில் நமக்காக நம்மை படைத்த  இறைவன் பலவற்றை படைத்துள்ளான் ஆனால் அவன் நமக்கு தந்த பொருளை அப்படியே அனுபவிப்பது திருட்டுக்கு சமன் . அதற்காகத்தான் அவன் தந்த பொருளை அவன் முன் சமர்பித்து இறைவா நான் வாழ எனக்காக இந்த பொருளை இன்று தந்ததிற்கு உமக்கு நன்றி. இந்த பக்தியை நாம் இறைவனுக்கு செலுத்த வேண்டும் . இது நாம் இறைவனுக்கு கூறும்  நன்றியே ஆகும். இந்த  பக்தியும் நாம் நன்றாக வாழத்தானே தவிர இறைவன் வாழ அல்ல .
                         நம்முடைய படைப்பு என்பது இறைவனோடு நாம் மகிழ்ச்சியாய்  இருப்பதுகாவே தவிர வேற எந்த ஒரு சுயநல காரணமும் அல்ல. இப்ப ஒரு கேள்வி எல்லாம் அது என்ன வென்றால் பிறகு ஏன் இந்த உலகில் அனைவரும் துயரம் அடைகிறார்கள் என்று ? நாம் சற்று ஆழமாக சித்தித்தால் மனிதன் படும் ஒவ்வொரு துயரங்களிர்க்கும் காரணகர்த்தா மனிதனே இருப்பான். அதற்க்கு இறைவன் எந்த விதத்திலும் பொறுப்பல்ல. இறைவன் நினைத்தால் எல்லோரும் சந்தோசமாய் இருப்பார்களே ஏன் இறைவன் நினைப்பதில்லை  என்றும் கேட்கலாம். அனைவரும் சந்தோசமாய் இருந்தால் இந்த உலகம் எப்படி இருக்கும் எந்த ஒரு ஒரு சுவாரசியம் இல்லாமல் நாம் அனைவரும் இயங்கி கொண்டிருப்போம். கிரிகெட் விளையாட்டில் கூட ஒரு நபரிடம் மட்டையும் இன்னொருவரிடம் பந்தும் இருந்தால்தான்  சுவாரசியமாக இருக்கும் அதை  விடுத்து விளையாட்டில் பங்குபெறும் அனைவரிடமும் பந்தும் மட்டையும் இருந்தால் அந்த விளயாட்டில் எந்த ஒரு சுவாரசியமும் இருக்காது . இதுதான் இறைவன் படைத்த இந்த பிரபஞ்சத்தில் வாழும்  உயிர்களின் வாழ்கையின் இரகசியமும் கூட ....

தொடரும் ,

Thursday 25 August, 2011

இந்து மதம் -10

   
இறைவன் நேரில் வருவானா ?

        " பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம் தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே " இது இறைவனாகிய கண்ண பெருமான் கீதா உபதேசத்தில் அர்ஜுனனுக்கு கூறியது . அது என்னவென்றால் நல்லவர்களை காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் , தர்மங்களை நிலை நிறுத்துவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கின்றேன் என்று கிருஷ்ணன் கூறுகிறார். அவ்வாறு இறைவன் இந்த பூமியில் பத்து அவதாரம் எடுத்தார் என்கிறது இந்து மதம். சில சமயம் நம்மை தர்ம நெறியில் வழிநடத்த  பல மகான்களையும் இந்த உலகிற்கு அனுப்பி வைக்கிறார் அவசியம் இருந்தால் தானும்  வருகிறார்.
                  ஆனால் மற்ற மதங்களோ இறைவன் எந்தவொரு அவதாரமும் எடுப்பதில்லை அவர் தன் தூதர்களை மட்டும்த்தான் அனுப்புவார் என்கிறது . அதாவது இறைவன் ஒரு அதிகார தோரணை கொண்டவன் போல் சித்தரிகின்றனர். ஆனால் இந்துமதமோ இறைவன் நம்மை அரைவனைப்பதில் தாய் என்றும் , நம்மை வழிநடத்துவதில் ஒரு தந்தை என்றும் தன் நாட்டு  மக்களை காக்கும் மன்னனை போலவும் , வெற்றியிலும் தோல்வியிலும் பங்கேற்கும் ஒரு நல்ல நண்பனை போலவும் இறைவனை சித்தரிகின்றது.
                   நமக்கு  ஒரு துன்பம் என்றால் ஓடி வருபவனே இறைவன்..!!! அதைவிடுத்து  எந்த ஒரு சூழ்நிலையிலும் என் நிலையில் இருந்து  நான் இறங்கி வரமாட்டேன் என்று  கூறுபவன் இறைவன் இல்லை . ஆனால் அவன் நம்மை காக்க எந்த ரூபத்திலும் வருவான் நாம் தான் அவனை அறிவதில்லை ..!!!! அறிந்து கொள்ள முயல்வதும்  இல்லை...!!!!!
             மன்னன் என்பவன் மக்கள் எப்படி வாழவேண்டும் என்று சட்டம் உருவாக்கினால் மட்டும் போதாது அதன் படி வாழ்ந்து காட்டி மற்ற மக்களுக்கு உதாரணமாக இருக்கவேண்டும்.அதே போலத்தான் தர்ம நெறியில் நம்மை வாழ சொல்லும் இறைவனும் இந்த பூவுலகில் அவதரித்து அதன் படி வாழ்ந்தும் நமக்கெல்லாம் ஒரு உதாரணமாகவும் இருகின்றார் என்கிறது இந்து மதம்.
           ஒரு முறை ஒரு மன்னன்  அவருடைய மகன் மற்றும் அவருடைய அமைச்சர் ஆகியோர் ஒரு கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள் அப்போது அந்த மன்னனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது அந்த
சந்தேகத்தை தீர்க்கும்படி தன் அமைச்சரிடம் கேட்டார் ..அது என்ன சந்தேகம் என்றால் மக்களை காப்பாற்ற இறைவன் என் நேரில் வரவேண்டும் அவருக்குதான் சக்தி இருக்கிறதே எனவே எதாவது ஒரு தூதரை  அனுப்ப வேண்டியதுத்தானே அவர் நேரில் வரவேண்டியதன் அவசியம் என்ன ? என்று கேட்டார் . அதற்க்கு அந்த அமைச்சர் என்ன விளக்கம் கொடுத்தும் அந்த மன்னன் புரிந்துகொள்ள முயலவில்லை ..பொறுமையை இழந்த அந்த அமைச்சர் திடிரென்று மன்னனின் மகனை ஆற்றில் தள்ளி விட்டார். இதை கண்ட மன்னன் உடனே ஆற்றில் குதித்து தன் மகனை காப்பாற்றினார்...மகனுடன் படகில் ஏறிய மன்னன் அமைச்சரை பார்த்து உமக்கு என்ன புத்தி பேதலித்து போனதா ?.. யாரங்கே ..!!! இந்த அமைச்சரை கைது செய்யுங்கள் என்றார். அதற்க்கு அந்த அமைச்சர் மன்னா !!! சற்று பொறுமையாய் இருங்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு இப்ப ஒரு தீர்க்கமான பதில் கிடைத்து விட்டது என்றார்." என்ன உளறுகிறீர் ?"  என்றார் மன்னன் ...அதற்க்கு அமைச்சர் மன்னரே உங்களுடைய மகன் நீரில் விழுந்த பொழுது நீங்கள் என் ஆற்றி விழுந்து உங்கள் மகனை காப்பாற்றினீர்கள்..அதற்கு மன்னன் " என்ன மடத்தனமாக பேசுகிறீர் ? என் மகனை நான் காப்பாற்றாமல் வேற யார் காப்பாற்றுவார் "...அதற்க்கு அமைச்சர் மன்னரே எந்த வேலை என்றாலும் அதை செய்ய காவலர்களை ஏவும் நீங்கள் உங்கள் மகன் தண்ணீரில் விழுந்த பொது மட்டும் ஏன் காவலர்களை ஏவாமல் நீங்கள் ஆற்றில் குதித்தீர்கள் என்றார்...அதற்க்கு மன்னன் அமைச்சரே விழுந்து என் மகன் அல்லவா அவன் தண்ணீரில் துடிப்பதை பார்த்து கொண்டு என்னால் இருக்க முடியவில்லை உடனே நானும் விழுந்தேன் என் மகனை காப்பாற்றினேன் இதில் என்ன தவறு என்றார் .
               உடனே அமைச்சர் மன்னா இப்போது புரிகிறதா இறைவனும் அப்படிதான் அவன் படைத்த எல்லா உயிருக்கும் அவனே
தாயும் , தந்தையும் ஆவான் . நமக்கு ஒரு துன்பம் என்றால் நம்மை காப்பாற்ற அவனும் இந்த பூவுலகில் அவதரிக்கின்றான் என்றார்.

தொடரும் ,
                                                            

Tuesday 9 August, 2011

இந்து மதம் -9

       
இறைவன் எப்படிபட்டவன் ...!

  
              இஸ்லாம் மதம் மற்றும் கிறிஸ்துவமதம் இறுதி தீர்ப்பு நாளில் இறைவன் தீர்ப்பளித்து  ஒரு சிலரை  சொர்கத்திற்கும் ஒரு சிலரை நரகத்திற்கும் அனுப்புவார்  என்று அவர்களின் பைபிள் மற்றும் குரான் கூறுகிறது. ஆனால் நம் இந்து மதம் என்ன கூறுகிறது என்று ஒப்பிட்டு பார்ப்போம்.

         அதாவது இறைவன் (அல்லா / கர்த்தர் ) மனிதர்களை படைத்து அவர்கள் வாழும் காலத்தில் செய்த நன்மைகளையும் தீமைகளையும் வைத்து ஒருசாராரை சொர்கத்திற்கும் ஒருசாராரை நரகத்திற்கும் அனுப்புகிறார் ..ஆனால் இந்துமதமோ ஒருவனுக்கு நிரந்தர சொர்கமோ அல்லது நிரந்தர நரகமோ கிடையாது  என்கிறது..அப்ப எதுதான் நமக்கு நிரந்தர இன்பம் என்று பார்க்கும் பொழுது மனிதனாக பிறந்த ஒருவனுக்கு நிரந்தர இன்பம் என்பது இறைவனை அடைவதே என்கிறது இந்து மதம்..ஆனால் அது ஒரே பிறவியில் சாத்தியமா என்றால் சாதாரண மனிதர்களால் முடியாது ..ஒருவன் தான் செய்யும் பாவங்களால் பல்வேறு பிறவிகள் எடுக்க நேர்கிறது ..ஒருவன் இறுதியாக இறைவனை  அடைந்த  பிறகு மட்டுமே  அவனுடைய பிறவி முற்று பெறுகிறது .ஒருவனை படைத்தால்  மட்டும் போதாது அவனை திருத்தி மீண்டும் தன்னில் சேர்த்துகொள்ளும் கடமையும்  அந்த இறைவனுக்கு உண்டு என்கிறது  ஹிந்து மதம் .

 இறைவன் ஒருவனை நிரந்தரமாக நரகில் தள்ளுவதற்கு இஸ்லாமியர்கள்  மற்றும் கிறிஸ்துவர்கள் சொல்லும் காரணம் அவன் கடைசி வரை திருந்தவில்லை ( இதில் திருந்தவில்லை என்பது அவர்கள் மதத்தில் இணையவில்லை என்பதும்  ஒரு காரணம் ). ஆனால் அதிலும் ஒரு கேள்வி எழுகிறது   அவன் (மனிதன்) திருந்தவே மாட்டான்  என்று அவனை நரகில் தள்ளுவதற்கு பதில் அவனை படைத்திருக்காமல் இருந்துருக்க வேண்டியதுதானே ? அவன் இறுதி வரை திருந்த மாட்டான் என்று எல்லாம் வல்ல அந்த ஏக இறைவனை அவனை படைக்கும்  முன்பே தெரியாதா ? பிறகு ஏன் அவனை படைக்கவேண்டும் ..!..அவனை ஏன் நிரந்தர நரகில் தள்ளவேண்டும் ? இறைவன் அவ்வளவுகொடூரமானவனா என்ன ?
     
     கெட்டவனுக்கு நரகில் துன்பப்பட மேலும் மேலும் அவனுக்கு உடம்பும் சதையும் கொடுக்கும் அல்லா/கர்த்தர்  அவன் திருந்துவதற்கு மீண்டும்  ஒரு சந்தர்ப்பம் ஏன் கொடுப்பது  இல்லை ?  பிறகு  ஏன் அவனை கருணையுள்ளவன் என்று கூறவேண்டும் ?
  
    ஒருவனை நரகில் தள்ளுவதற்கு தன் ஒட்டுமொத்த சக்திய கொண்டு அவனை  உயிர் பெற செய்யும் அல்லா/கர்த்தர் அதே சக்தியை கொண்டு அவன் வாழும்போது " நீ  திருந்துவாயாக " என்று கூறி ஒரே நொடியில் அவனை நல்லவனாக மாற்ற வேண்டயது தானே ? 
ஏன் செய்வது  இல்லை ?...இவ்வாறு பல கேள்விகள் எழுகிறது .

  எப்படி ஒரு பிள்ளையை பெற்றவனுக்கு அவனை நல்ல ஆளாக்கும் கடமையும்  ஒரு தந்தைக்கு உள்ளதோ  ...! அதைபோல் படைத்த உயிர்களை நல்வழிபடுத்தி மீண்டும் தன்னில் சேர்த்துகொள்ளும் கடமையும் உள்ளது அந்த  இறைவனுக்கு ..! மகன்  திருந்த வில்லை என்று அவனை வாழவும் விடாமல் சாகவும் விடாமல்  எந்தவொரு தந்தையும் தன் மகனை சித்திரவதை செய்வதில்லை அதே போல்தான் இறைவனும் என்கிறது இந்து மதம் .

 எனவே  ஒரு ஆத்மாவின் இறுதிநிலை என்பது நிரந்தர சொர்கமும் இல்லை நிரந்தர நரகமும் இல்லை , முக்தியே அதன் இறுதிநிலை என்கிறது ..மனிதனாக பிறந்த  ஒருவன் முக்தி அடைவதே மெய்யான இன்பம் என்கிறது  , முக்தி என்றால் இறைவனை அடைதல் , ஒருவன் இறைவனை அடைந்த  பிறகு அவனுக்கு பிறவியில்லை , உடல் இல்லை , பசி இல்லை , நோயில்லை . இறைவனால் படைக்க பட்ட எல்லா உயிரும் ஒரு நாள் இறைவனை கண்டிப்பாக அடையும் என்கிறது ..! அதுவும் அவன் முயற்சியை கொண்டே ..!
           
     ஆனால் இஸ்லாம்/ கிறிஸ்துவ  மதம்   ஒருவனின் இறுதிநிலை சொர்கமே  அல்லது நரகமே என்கிறது ..  அதாவது ஒரு மனிதனுக்கு சொர்கத்தில் நிரந்தர ஆறும் , குராயாத உணவும் , ஆசைக்கு ஒரு துணையும்  கிடைக்கும் என்கிறது ..மீண்டும் அது ஒரு போக வாழ்க்கைக்கே முக்கியத்துவம் தருகிறது ...! ஆனால் இறைவனை அடைந்தவனுக்கு ஆறும் தேவை இல்லை , பசிக்கு உணவும் தேவை இல்லை , இச்சைக்கு துணையும் தேவை இல்லை ...!

ஒரு சின்ன கதை ..!  ஒரு ஞானி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார் அப்போது அந்த ஆற்று நீர் ஒரு  தேளை இழுத்து சென்றதை பார்த்து அதை காப்பாற்றும்  பொருட்டு அதை தன் கையில் பிடித்தார் அந்த தேள் உடனே அவரை கொட்டியது அதை பார்த்த அந்த ஞானியின் சீடர் குருவே அந்த தேளை காப்பாற்ற நினைத்த உங்களையே அது கொட்டிவிட்டது பிறகு அதை ஏன் உங்கள் கையில் பிடிக்கிறீர்கள் அதை விட்டு விடுங்கள் என்று கூறினார் அந்த  சீடர் ..உடனே குரு கூறினார் சீடனே தேளின் குணம் கொட்டுவது அது தன் கர்மத்தை சரியாக செய்கிறது ..மனிதராகிய நம் குணம் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அந்த  தேளை காப்பாற்றுவது ..!அதை தான் நான் செய்கிறேன் என்றார் ...! இறைவனால் ஞானம் பெற்ற ஞானிக்கே இந்த குணம் என்றால் இறைவனின் குணம் எப்படி இருக்கும் ?  அவன் ஞானிகேல்லாம் ஞானி ...! அவன் அறியாத சூட்சமமா என்ன ...!

தொடரும் ...
                                                    

Monday 11 July, 2011

இந்து மதம் -8

                                                         
 அனைவருக்கும் ஏன் கிடைக்கவில்லை  வேதம் !

இன்று பல மதத்தில் சிறு குழந்தையிடம் கூட அவர்கள் மதத்தின் வேதங்களை படிக்க செய்கிறார்கள் ...அனால் நம் இந்துமதத்தில் மட்டும் என் அனைவரிடமும் வேதம் இல்லை என்று வருத்த படும் பலபேர் நம் இந்துமதத்தில் இருக்கின்றார்கள் ...முதலில் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன் சிறு வயது முதல் பைபிள் படித்த கிறிஸ்துவர்கள் எல்லாம் கிறிஸ்து போல் வாழ்கின்றார்களா ? அல்லது சிறு வயது முதல் குரான் படித்த அணைத்து முஸ்லிம்களும் நல்ல ஒழுக்கங்களோடு இருகின்றார்களா ?

ஒரு எடுத்துகாட்டு ....

பள்ளி முடிந்து மாலை வேளையில் ஓடி விளையாடும் சிறுவனிடம் பள்ளி பாட புத்தகத்தை படிக்க சொன்னால் அவன் படிக்க மாட்டான் ,பெற்றோர்கள் கண்டித்து படிக்க சொன்னால் அவன் அந்த புத்தகத்தை படிப்பது போல் ஏமாற்றுவான் , அவன் எண்ணமெல்லாம் அந்த விளையாட்டிலே இருக்கமே தவிர அந்த புத்தகத்தில் என்ன விசயம் இருக்கு என்று அவனுக்கு தெரியாது ...

அந்த மாணவனின் நிலையில் தான் நாம் இன்று இருக்கிறோம் .அதாவது இன்று (கலியுகத்தில் ) நிரந்தரமில்லாத பணம், பொருட்கள் , நிலையில்லாத சுகங்களின் மீதே நம் மனம் அலைபாய்கிறது ...அதற்கேற்றார் போல் இறைவனும் நமக்கு பல சந்தர்பங்களை தருகிறான் அவற்றை பெறுவதிற்கு , என்று நாம் இந்த நிரந்தரமில்லாத பொருட்களை மறந்துவிட்டு எதுதான் நமக்கு நிரந்தர இன்பம் என்று யோசிக்கும் தருவாயில் தான் நமக்கு இறைவன் அளித்த வேதங்களை படிப்பதற்கு இறைவன் முலாமாகவே வாய்ப்பு கிடைகின்றது ....அபோதுதான் அந்த வேததிர்கான பொருள் நமக்கு விளங்கும் ....அதை விடுத்து உலக பற்றுகளில் நம் ஆசையை விடாமல் நாம் எத்தனை தடவை வேதங்களை படித்தாலும் அதன் அர்த்தம் நமக்கு விளங்காது ...


பிராமணர்களால் தான் வேதம் நமக்கு கிடைக்க வில்லை என்று நாம் குறை கூறுகிறோம் .." இறைவைனின் வேதத்தை நமக்கு கிடைக்காமல் தடுப்பதற்கு இவர்கள் யார் ? " இந்த பொருள் இவனுக்கு இந்த நேரத்தில் கிடைக்கும் என்று இறைவன் நினைத்த பிறகு அதை தடுக்கும் உரிமை யாருக்கு உண்டு ? ...

எனவே நமக்கும் வேதம் கிடைக்கும் ...அதற்கான நேரம் வரும்பொழுது ...

குரான் நல்லவற்றை தான் போதிக்கிறது அதை நாங்கள் முழு அர்த்தத்தோடு சிறு வயதில் முதல் படித்து வருகிறோம் என்று பெருமிதமாய் அவர்கள் கூறினால் அவர்கள் நல்ல ஒழுக்கத்தோடு இருப்பார்கள்.....உலகில் எங்கும் கலவரமே இருக்காது......

அதைபோல் சிறு வயதில் முதல் நாங்கள் முழு அர்த்தத்தோடு பைபிளே படித்து வருகிறோம் என்று கிருஸ்துவர்கள் கூறினால் மட்ரவர்களை மதம் மாற்றாமல் முதலில் இவர்கள் திருந்தி உலகில் எத்தனையோ மதர் தெரேசாவாக மாறி இருப்பார்கள்..

அது ஏன் நடக்கவில்லை ...யாருக்குமே முழுமையான , இறைவனின் உண்மையான வேதம் கிடைக்க வில்லை ...சற்று சிந்திக்க வேண்டும் அர்ஜுனனுக்கு கிருஷ்ணரால் கீதை எப்ப உபதேசிக்க பட்டது ...ஒரு போர்க்களத்தில் தானே ஏன் வேறு எங்கு வைத்தாவது உபதேசித்திருக்க வேண்டியது தானே ஏன் போர்களத்தில் உபதேசிக்க பட்டது....ஏனென்றால் அது தான் சரியான இடம் அதுதான் சரியான தருணமும் கூட ....செய்வதறியாமல் எல்லாவற்றயும் விடுத்து கிருஷ்ணனை சரண் அடைந்தான் அர்ஜுனனன், அந்த தருணத்தில் தான் கீதை அவனுக்கு  உபதேசிக்கப்பட்டது ...ஒருநாள் நமக்கும் கிடைக்கும் அதற்கான தகுதி நமக்கு வரும் பொழுது ...நம் அனைவரின் கையிலும் ஒரு நாள் பகவத் கீதை இருக்கும் அதற்கான மன பக்குவம் நமக்கு கிடைக்கும் பொழுது ....


தொடரும்...

Thursday 30 June, 2011

இந்து மதம் -7

                                                            

மறு ஜென்மம் !!!!!!!...

       இந்து மதமும் மற்றும் பௌத்த மதம் உலகில் மற்ற அந்நிய மத கொள்கைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முக்கியமான கொள்கைகளில் இதுவும் ஒன்று அதுதான் மறுஜென்மம்....
         இஸ்லாம் மதமும் கிருஸ்துவ மதமும் மறுஜென்மம் என்பது மனிதனுக்கு கிடையாது அவன் இறந்த பிறகு ஒன்று சொர்கத்திற்கு செல்வான் அல்லது நரகத்திற்கு செல்வான் என்கிறது...அனால் இந்து மதமோ ஒரு மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆத்மா அவன் செய்த கர்ம வினைகளுகேர்ப்ப வேறொரு உடலை அடைகிறது  அதுவே மறு ஜென்மம் என்கிறது....வேறொரு உடல் என்பது மிருகங்களுடைய அல்லது பறவைகளுடைய மற்றும் பூச்சிகளுடைய அல்லது மனித உடல் என்பனவாகும்...

ஏன் மறுஜென்மம் ? 

               
                        பிறவிகளிலே மிகவும் உயர்ந்த பிறவி மனித பிறவி ஆகும் . ஏன் என்றால் மனித பிறவியில் இருக்கும் ஒரு உயிரால் மட்டுமே பகுத்தறிவோடு சிந்தித்து செயல் படமுடியும். எது தர்மம் எது அதர்ம செயல் என்று பிரித்து பார்த்து செயல் படும் மனோபாவம் மனித பிறவிக்கு மட்டுமே உண்டு .அனால் மனிதனோ இந்த அரிதான பிறவியை கொண்டு இறைவன் வகுத்த அர நெறியில் வாழ்கையை நடத்தாமல் தனக்கு எது சரியென்று படுகிறதோ தான் வகுத்த அந்த  வழியிலே செல்கிறான். சரி அவன் வகுத்த வழி தர்ம வழியாய் இருந்தால் பரவாஇல்லை , என்று அது அதர்மத்தை நிலைநாட்டுகிறதோ அன்று முதல் அவன் தீய செயலை  செய்ய தொடங்குகிறான். அவன் செய்த தீய செயல்களே அவனுடைய மறுபிறவிக்கு காரணமாய் அமைந்து விடுகிறது. ஒரு ஆத்மா என்று முக்தி அடைகிறதோ அதன் பிறகே அதற்க்கு மறு  பிறவியில்லை . அனால் முக்தி அடைவது என்பது ஒரு ஆத்மா மனித பிறவியில் இருக்கும் பொதுத்தான் சாத்தியம் என்கிறது இந்து மதம் .
              இன்றும் நாம் காணலாம் மனிதன் மட்டும் பழைய நிலைகளில் இருந்து மாறுபட்டு கொண்டிருக்கிறான் ஏன் நம்மோடு தோன்றிய ஆடு மாடு மற்றும் விலங்குகள் , பறவைகள் மறுபடாமல் இருக்கின்றன. மனிதனுக்கு மூளை இருப்பது போல் விலங்குகளுக்கும் மூளை இருக்கின்றன அனால் அதெல்லாம் சிந்திப்பது இல்லை மனிதனாகிய நாம் தான் சிந்தித்து செயல் படுகிறோம் . அதனால் தான் ஒரு ஆத்மா  முக்தி அடைய மனித பிறவியே சிறந்த பிறவி என்கிறது இந்து மதம் .அனால் நமக்கு இறைவன் கொடுத்த இந்த அறிய வாய்ப்பை நாம் ஒழுங்காக பயன் படுத்துகிறோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.....நாம் செய்யும் சில தீய செயல்களாலே நாம் முக்தி அடையாமல் மீண்டும் வேறொரு பிறவி எடுத்து விடுகிறோம்...ஏன் இந்த மறு பிறவி என்றால் செய்த வினைகளுக்கான தண்டனை என்பதை விட நம் பாவத்தை போக்குவதற்கான வழி என்றே சொல்கிறது இந்து மதம் ...எடுத்து காட்டாக ஒரே வகுப்பறையில் இரண்டு மாணவர் இருக்கிறார்கள் ஒருவன் நன்றாக படிப்பான் மற்றவன் உதாரிதனம்மாக திரிகிறான்...நன்றாக படித்த மாணவன் இறுதி ஆண்டுதேர்வில் வெற்றிபெற்று அடுத்த வகுப்புக்கு செல்கிறான் அந்நாள் உதாரிதனமாக திரிந்த மாணவனோ அதே தேர்வில் தோல்வியுற்று மீண்டும் அதே வகுப்பில் படிக்கும் படி ஆகிவிடுகிறது ...இது அந்த உதாரிதனம்மாக  திரிந்த மாணவனுக்கான தண்டனை அல்ல மேற்படிப்புக்காக அவனை தயார் ஆக்கி கொள்ள மீண்டும் அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பம்...இதுவே மறுபிறப்பின் ரகசியம் ...ஆன்மிகபாதையில் முன்னேருகிறவன் படி படியாய் முன்னேறி இறைவனை அடைகிறான் ....பாவம் செய்தவனோ அவன் கர்ம வினைகளுகேர்ப்ப பல பிறவி எடுத்து தாமதமாக இறைவனை அடைகிறான் ...எனவே பிறவி என்னும் பெருங்கடலை தாண்டி நாமும் என்றாவது இறைவனை அடையவது சாத்தியமே இது சத்தியமே....

தொடரும் ....

Wednesday 29 June, 2011

இந்து மதம் -6


                                                         
                                          
இறைவனுக்கும் நமக்கும் என்ன உறவு ?

இறைவனுக்கும் நமக்கும் இடையில் உள்ள உறவு என்னவென்று  இந்து மதம் கூறுகிறது  என்று பார்ப்போம்..

                    பொதுவாக இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையில் உள்ள உறவு என்பது படைத்தவன் மற்றும் படைக்க பட்ட உயிர் என்பதையும் தாண்டி இறைவனை  தாயாகவும் , தந்தையாகவும் , காதலனாகவும் , நண்பனாகும் தனக்கான முதாளியாகவும்  பார்க்கிறது இந்து மதம். இது சரியா என்றால் இது தான் சரி இதுதான் நமக்குண்டான சுதந்திரம். இறைவனும் மனிதர்களின் என்னங்களுகேர்ப்ப  இசைந்து கொடுக்கிறான் என்கிறது   இந்துமதம், அதற்கான ஆதாரமே நமது புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் . அப்படி நாம் நினைப்பது தவறென்றால் தன்னை இப்படிதான் பார்க்கவேண்டும், தன்னிடம்  இப்படிதான் பேசவேண்டும், பழகவேண்டும்  என்று அகம்பாவம் பிடித்து திரியும்  மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள  வித்யாசம்தான் என்ன என்று சிந்திக்க சொல்கிறது இந்து மதம். " அடக்கமாய் இரு அடிமையாகிவிடாதே " என்று பகவத் கீதையில் கண்ணபிரான் கூறியிருக்கிறார் , அப்படி இருக்கையில் நாம் படைத்த உயிர்கள்
நமக்கு அடிமையாய் மட்டுமாய் இருக்க வேண்டும் என்று எப்படி இறைவன் நினைப்பார்  என்று சிந்தித்தார்கள் நம் முன்னோர்கள்  அதன் விழைவே இறைவனை தாயாகவும்,தந்தையாகவும் பார்த்திருக்கிறார்கள் .  
             அவ்வாறே ஆண்டாள்  இறைவனை தன் காதலனாக  நினைத்து இறைவனை  அடைந்தாள் , திருஞான சம்பந்தருக்கு அன்னை உமா தேவியாக வந்து பாலுட்டினார், அர்ஜுனனுக்கோ நண்பனாகவும் , பாரத போரில் ஒரு நல்ல வழிகாட்டியுமாய் இருந்தார். இதில் இருந்தே தெரிகிறது தூய பக்தர்களுக்காக இறைவன் என்றும் தன் நிலையிலிருந்து இசைந்து கொடுப்பான் என்று...

            ஆனால் மற்ற மதங்களோ இறைவன் என்பவன்  முதலாளி நாம் அனைவரும் அவன் படைத்த அடிமைகள் மட்டுமே அவனை நாம் எவ்வாறும் அவனை உறவு சொல்லி அழைக்க கூடாது அது பாவம் , மீறி அழைத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவோம் என்கிறது....ஒரு நிமிடம் சற்று  சிந்திக்கவேண்டும் முதலாளி அடிமை என்பதே இந்த உலகில் இருக்க கூடாது என்று கூறும்   இறைவனே  நம்மை அடிமைபடுத்துவாரா ? அவன் என்ன  சாதாரண தலைகனம் பிடித்த மனிதனா ? ...அவன்  இறைவன்...
அவன் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய தன்னலமில்லாத பக்தி மட்டுமே ..
அந்த பக்தியை எந்த வழியில்  செலுத்தினால் என்ன ?
நமது தூய பக்திக்காக தன் நிலையில் இருந்து இறங்கி வராதவர் எப்படி
இறைவனாக இருக்க முடியும் என்கிறது இந்து மதம்....     


தொடரும் .....

Wednesday 22 June, 2011

இந்து மதம் -5

இறைவனை ஏன் அடையவேண்டும் ?

இந்த  கலியுகத்தில்  மனிதன் முதலில் எது நிரந்தர இன்பம் எது நிலையில்லாத இன்பம் என்று அறிய இன்னும் முயற்சிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும் .இன்று  அவன் எதெல்லாம் நிரந்தரம் என்று நினைக்கிறானோ அதெல்லாம் அவன் கண் முன்னே  அழிந்து  போனாலும் மீண்டும் மீண்டும் அதையே அடைய துடிக்கிறான்.சிறு வயதில் ஒரு பொம்மை மீது ஆசை வைக்கிறான் பின் வளர்ந்த பிறகு அந்த பொம்மையின் மீது  உள்ள ஆசை போய்விடுகிறது. பின் குறிப்பிட்ட வயதிற்க்கு பின் எதிர் பாலினத்தின் மீது அவன் ஆசை போகிறது . அதுவும் மணம் முடித்த பின் கசக்கிறது . பின் பணத்தை தேடி அலைகிறான் அது கிட்டியவுடன் நின்மதியாக  இருக்கிறான் என்றால் இல்லை , இருக்கும் பணத்தை மேலும் எப்படி அதிகமாக்குவது அதை எப்படி பாதுகாப்பது என்று சிந்தித்து தன் வாழ் நாளை அதிலே வினாக்குகிறான் சரி அப்படி அவன் சேர்க்கும் பணம் கடேசி வரை அவன் கூட நிரந்தரமாக இருக்குமா என்றால் அதுவும்  சந்தேகம் தான்.
       
                         பின் எதுத்தான் நிரந்தரம் என்று சிந்தித்து பார்க்கும் முன் அவன் ஆயுளும்  முடித்து விடுகிறது. இன்று நாம் வாழும் இந்த பூமியே நிரந்தரமில்லாதது அப்படி இருக்க இந்த பூமியில் இருக்கும் நாம் மற்றும் நாம் அடையும் பொருட்கள் எப்படி நிரந்தரமாய் இருக்க முடியும் . அப்படி நிரந்தரமில்லாத இந்த பொருட்கள்  மற்றும் அசைகளால் எப்படி நிரந்தரமான இன்பத்தை அடையமுடியும்?. இறைவனின் ஒரு அம்சமாய்  அவனிடம் இருந்து பிரிந்த நாம் அவன் தோற்றவித்த இந்த மாய உலகத்தையே நாம் நிரந்தரம் என்று மீண்டும் மீண்டும் அதையே அடைய விரும்புகிறோம் . சாகும் தருவாயில் கூட நாம் நம்மை படைத்த  இறைவனை நினைப்பதில்லை மாறாக அவன் உருவாக்கிய   மாய தோற்றங்களே நிரந்தரம் என்று அதையே நினைத்து  உயிரை விடுகிறோம்  . அதுவே நம்  மறு பிறவிக்கு காரணமாய் அமைத்து விடுகிறது. அப்படி என்றால் எது நிரந்தர இன்பம் என்றால்... இறைவனிடம் இருந்து பிரிந்த நாம் மீண்டும் அவனை  அடைதலே நிலையான இன்பம் . அவனை அடைந்த பிறகு நமக்கு மறு பிறப்பில்லை. மறுபடியும் பிறப்பதால்  தானே நாம் ஒரு உடலை அடைய வேண்டியதிருக்கிறது , பிறகு ஒரு சொந்தம் கிடைக்கிறது ஒரு சமயம் அந்த சொந்தம் நம்மை பிரியும் பொது நாம் துக்க படுகிறோம் , பிறகு பொருளை சேர்க்க மாடாய் உழைக்கிறோம் , அந்த பொருளையும் நாம் சாகும் பொழுது  எடுத்து செல்ல முடியவில்லை , நாம் கொண்ட உடலும் நோய் வாய் படுகிறது இதனால்  மேலும் துன்பமடைகிறோம் . இதெல்லாம் ஏன் என்றால் நாம் நம் பற்றுதலை இறைவனின் மீது வைக்காமல் இறைவன் படைத்த இந்த நிரந்தர மில்லாத பொருட்களின் மீது வைப்பதினால்  வந்த வினை.
                       ஆனால் இறைவனின் விருப்பமோ அவனிடம் இருந்து பிரிந்த அவனுடைய அம்சமாகிய நாம் அவனை   அடைவதிலே..... நம்முடைய நிலையான இன்பமும் அவனே . அவனை அடைந்த பிறகு நமக்கு பிறவி இல்லை , உடல் இல்லை  , சொந்தம் தேவையில்லை பொருட்கள் தேவையில்லை , பசி இல்லை , பிணி இல்லை. ஒரு தங்கத்தில் இருந்து வடிவமைக்க பட்ட கம்மல், தோடு , வளயல் , மூக்குத்தியை உருக்கினால் மீண்டும் அதே  தங்கமாய் மாறும். அதுபோல் நாம் இறைவனை அடைவதினால் அவனோடு கலந்து அவனில் ஒரு அங்கமாகிறோம்.அவன் என்றும் இன்பமயமாய்  இருப்பவன் அவனோடு நாம் கலப்பதினால் நாமும் நிலையான இன்பம் கொண்டிருப்போம்.


தொடரும் ....

 

Tuesday 7 June, 2011

இந்து மதம் -4



                                                           
இறைவன் படைத்தானா ?

 பொதுவாக எல்லா மதமும் கூறுகிறது  இறைவன்  எல்லாவற்றையும் படைத்தான்  என்று .... அனால் உண்மையில் அப்படி படைக்கிறான் என்றால் எதை மூலமாக கொண்டு படைக்கிறான் ? எதற்காக நம்மை படைக்கிறான் ?
அதன் நோக்கம் என்ன ?  ...இதற்க்கு நம் ஹிந்து மதம் என்ன விளக்கம் தருகிறது என்று பார்போம் ...

இறைவன் என்பவன் என்றும் ஆனந்த மயமானவன் ...அவன் இந்த அண்டங்கள் மற்றும் ஜீவராசிகளை படைத்ததன் நோக்கமே அவன் ஆனந்தமாய் இருப்பதற்கே ...அவன் தனித்து இருக்க விரும்பவில்லை அதன் விழைவே இந்த உலகம் மற்றும் உயிரினங்கள். கடற்கரயில் விளையாடும்  குழந்தை  மணலில் அழகான வீடு கெட்டும் பின் வீடு திரும்பும்பொழுது அதை இடித்து விடும் காரணம் கேட்டல் சும்மா விளையாட்டாக கெட்டினேன் பின் இடித்தேன் என்று பதில் வரும். அதே போல் தான் இந்த அண்டத்தின் படைப்பும் .அனால் மற்ற மதங்கள் கூறுவது போல்  இறைவன் உலகை படைக்க ஆறு  நாட்கள் எடுக்கவில்லை.அவர் நான் பலவாக ஆவேனாக என்ற சங்கல்பம் எடுத்ததன் மூலம் தோன்றியவையே இவை அனைத்தும். அவர் தன்னையே மூலமாக கொண்டு எல்லாவற்றையும் படைத்தார் என்கிறது இந்து வேதங்கள். அவன் தன்னையே மூலமாக கொண்டு படைத்ததினால் எல்லாவற்றிலும் அவனுடைய அம்சம் நிறைந்திருக்கிறது . இதுவே இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்ற தத்துவத்துக்கு ஆதாரம்.
                         
    எப்படி ஒரு குயவன் மன்பாண்டகள் செய்ய மண்ணை மூல பொருளாக கொள்கிறானோ அதை போல் இறைவன் தன்னை மூல பொருளாக கொண்டான்.இதனாலே அவனை நாம் ஆதிமூலம் என்கிறோம். மற்ற மதங்கள் இறைவன் மனிதனை சேவை செய்வதற்காக அல்லது  வழிபடுவதற்காக படைதான் என்கிறது . ஆனால் இறைவனோ இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் நாம் சேவை செய்வதனொலோ அல்லது வழிபடுவதிலோ அவன் மகிழ போவதில்லை அவனுடைய எதிர்பார்பெல்லாம் மனிதன் தன் இறுதி இலக்கான தன்னை அடைவதிலே மகிழ்கிறான்.  ஹிந்து மதமோ இதை   இறைவனின் திரு விளையாடல்களே என்கிறது.
         உதாரணமாக பரமபதம் விளையாட்டை எடுத்து கொள்வோம் அதில் coins- ஆக இருப்பவன் மனிதன் , அவன் தன் மனதை தாயமாக உருட்டி விடுகிறான் நல்ல எண்ணங்கள் மற்றும் அவன் செய்யும் தர்மங்களின் மூலமாக விரைவாக முன்னேறி இறைவனை அடைகிறான்  அல்லது அவன் செய்யும் தீய வினைகளுக்கேற்ப மீண்டும் பின்னோக்கி செல்கிறான் இதுவே அந்த இறைவனின் விளையாட்டாகும். ஆனால் அனைவரும் ஒருநாள் பரமபதத்தை அடைவது சத்தியமே .

இறைவனை ஏன் அடையவேண்டும் ?

         அடுத்த பதத்தில் .....

தொடரும் .....
             

Monday 6 June, 2011

இந்து மதம் -3


                                                                 


ஒரே வழி ....

" ஆறேன்றும் குளமென்றும் ஓடையேன்றாலும் அது நீர் போகும் பாதை தன்னை குறிக்கும் "  என்ற அழகான பாடல் வரிகளுகேர்ப்ப இந்த உலகில் எத்தனயோ மதங்கள் இருந்தாலும்  அது நம்மை கடவுளிடம் கொண்டும் செல்லும் ஒரே பாதைதான் என்பதை உணர்ந்தாலே என் மதம் பெரியது உன் மதம் பெரியது என்ற சண்டை ஓயும்.இன்று பல மதங்கள் ஹிந்து மதத்தை பார்த்து சொல்லும் ஒரே சொல் இது சாத்தனின் மதம்.உண்மையில் சாத்தான் என்றால் யார் ? அப்படி ஒருவர் உண்டா என்றால் கிடையாது ....வேதங்கள் , பைபிள் , குரானை நன்கு படித்து அறிந்தவர்களை கேட்டால் ஒரே பதில் வரும் அதாவது மனதில் எழும் தீய எண்ணங்களே சாத்தான்...... அப்படி சாத்தன் என்ற தனி நபர் இருந்தால் இறைவன் ஏன் அவனை படைக்க வேண்டும் ? அதன் நோக்கம் என்ன ? இறைவன் நினைத்தால் அந்த சாத்தானை  ஒரே நொடியில் அழிக்க முடியும் தானே ? ஏன் இறைவன் அவனை ஒழிக்க வில்லை ? இதை ஒரு நொடி சிந்தித்தால் சாத்தான் என்பது எதுவென்று  விளங்கி விடும்..

              சாத்தான் என்பவன் வெளியில் இல்லை மக்களின் எண்ணங்களில் தான் இருக்கிறான் . அதை இறைவன் ஒழிக்க வேண்டியதில்லை நாம் தான் ஒழிக்க வேண்டும் .இப்படி மக்களை நல்வழிபடுத்தும் புனிதமான இந்து மதத்தை சாத்தானின் மதம் என்று கூறி மற்றவர்களின் நம்பிக்கையை உதாசினை படுத்துவர்களின் எண்ணங்களில் தான் சாத்தான் இருக்கிறான் .
அனால் ஹிந்து மதம் கூறுவதோ " எந்த பாதை உன்னை தர்ம வழியில் அழைத்து  செல்கிறதோ அது இறைவனை  அடையும் பாதையே " .

அதை விடுத்து  கூப்பாடு போட்டு அழைபதாலோ , ஐந்து வேளை தொலுவதினாலோ இறைவனை அடைய முடியாது என்பது சத்தியமே ...இன்று எங்கள் மதம்தான் உண்மையான மதம் என்று சொல்லும் மதத்தவர்கள் முதலில் தங்கள் முதுகை ஒரு முறை திரும்பி பார்க்கவேண்டும் நாம் நம்முடைய வேதத்தின் வழி நாம் நடக்கிறோமா என்று சிந்தித்தால் அடுத்த மதத்தை ஏளனம் செய்யும் தகுதி நமக்கு கிடையாது என்ற உண்மை தெரியவரும் . அதனால் தான் ஹிந்து மதத்தில் அடுத்த மதத்தின் நம்பிகையை பழித்ததாக எந்த வேதங்களிலும் காண முடியாது .எல்லாவற்றியும் தன்னில் ஐக்யமாக்குமே தவிர பிரித்து பார்ப்பதில்லை.ஹிந்து மதம் கூறுவது " முதலில் நீ திருந்து பின் அடுத்தவரை நீ திருத்து ".....இதுவே நம்மளுடைய சகிப்புத்தன்மைக்கு காரணம் . பிறர் மதத்தவர்கள் நம் மதத்தை பழிப்பது கசாப்பு கடைக்காரன் உயிர் பழி கூடாது என்று சொல்வது போல் ஆகும் "....


தொடரும் ....

Friday 3 June, 2011

இந்து மதம் -2

              
பல கடவுள் ஏன் ?

ஹிந்து மதம் அதை பின்பற்றுவருக்கு பல சுதந்திரங்களை தந்துள்ளது. இந்த நேரத்தில் தான் இறைவனை தொழ வேண்டும் இப்படி தான் வழிபட வேண்டும் என்று பிறர் கருத்துகளை  நம் மீது தினிபதில்லை.அவரவர் என்னங்களுகேர்ப்ப  இறைவனை வழிபடலாம் என்கிறது. இது எந்த மதத்திலும் இல்லாத கருத்து. இவ்வாரே வந்ததுதான் சிவ , விஷ்ணு , மற்றும் சக்தி வழிபாடு ஆகும்.
                     
              பிற மதத்தவர் நம் மதத்தை பார்த்து கேட்கும் கேள்வி இது தான் " பல கடவுள் இந்து மதத்தில் ஏன் ?...உண்மையில் பல கடவுள் உண்டா என்றால் இல்லை ... பிறகு யார் இந்த சிவன் , விஷ்ணு , பிரம்மா, பார்வதி , லட்சுமி சரஸ்வதி . இவர்களெல்லாம் ஒரே பரமாத்மாவின் வெவ்வேறு அம்சங்களே. அந்த பரமாத்மா உயிர்களை படைக்கும் போது பிரம்மா என்றும் , படைத்த உயிர்களை காக்கும் போது விஷ்ணுவாகவும் , படைத்த உயிர்களை அழிக்கும் போது சிவனாகவும் பார்கின்றனர் நம் இந்து மதத்தவர்கள்.அந்த பரமாத்மாவின் அளவற்ற சக்தியே பராசக்தி , அவரின் அளவற்ற செல்வமே லக்ஷ்மி , அவரின் ஞானமே சரஸ்வதி இவ்வாறு ஒரே பரமாத்மாவின் பல நிலைகளே பல கடவுளாக இருக்கிறது ஹிந்து மதத்தில். இப்படி பல வடிவங்களில் யாரை வணங்கினாலும்   நாம் அந்த ஒரே பரமாத்மாவையே வழி படுகிறோம். இந்து மதத்தில்  இறைவனுக்கு ஏன் இந்த பல வடிவங்கள் என்று கேட்டால்  பொதுவாக நாம் பள்ளி பருவங்களில் கணக்கு பாடங்களில் பாத்திருப்போம் ஒரு பெரிய கணக்கை பல steps ஆக பிரித்து வகுத்து இறுதியில் ஒரே விடையாக தந்துருப்பர்கள் . ஏன் இப்படி பல steps என்று கேட்டால்  நாம் எழிதில் அந்த கணக்கை புரிந்து கொள்வதற்கு , இப்படி நாம் ஒரே பரமாத்மாவை பல வடிவங்களில்  ஏதாவது  ஒரு வடிவினை பற்றிக்கொண்டு இறைவனை சாதாரண மக்களும் எழிதில் புரிந்து கொள்வதற்கே என்பது   இந்து மதத்தின் கூற்று .எப்படி ஒரு கணக்கில் பல steps இருந்தாலும் இறுதில் ஒரே விடையே தருவது போல் நாம் இப்படி பல வடிவங்களில்  இறைவனை வழிபடுவதினால் இறுதியில் அடைய போவது அந்த ஒரே பரமாத்மாவைத்தான்......

தொடரும் .....                                  

Sunday 22 May, 2011

இந்து மதம் - I

                                     
" இந்து மதம் "    

  மதம் என்றால் என்ன  ?

ஒரு மதம் பிடித்த யானையை பலத்த சங்கிளிலியால் கேட்டிபோடுவதை போல வாழ்கையில் நெறி கெட்டு  திரியும் மனிதனை நல் வழி படுத்துவதே மதங்கள் ஆகும் .உலகில் எத்தனயோ மதங்கள் உள்ளன அனால் அனைத்து மதங்களின் சாரமும் ஒன்றே மனிதனை அற நெறியில் செல்ல வைப்பதே. அப்படி பல மதங்களில் ஒன்றே நம் இந்து மதம் ஆகும். பலவற்றில் ஒன்று என்று சொல்லுவதை விட அனைத்திலும் சிறந்தது என்று சொல்லுவதே சிறப்பாகும்.

அப்படி என்ன சிறப்பு இருக்கிறது நம் இந்து மதத்தில் ?

           நம்  மதத்தை இந்து மதம் என்று சொல்லுவதை விட சனாதன தர்மம் என்று  சொல்லுவதே சிறப்பாகும் . இறைவனை அடைய நாம் செல்லும் இந்த வழியை சனாதன தர்மம் என்றே நம் முன்னோர்களால் பின் பற்றப்பட்டது . "இந்து மதம் " என்ற பெயர் அன்னியர்களால் இட பட்டது . அதாவது சிந்து நாகரிக மக்களால் பின் பற்ற பட்ட சனாதன தர்மமே இந்து மதம் என்று அன்னியர்களால் அழைக்கப்பட்டது. இது நமக்கு இடையில் வந்த பெயர் ஆகும்.
இந்து மதம் யாராலும் உருவாக்க பட்டதல்ல ....எப்போது தோன்றியது என்ற யாராலும் கணிக்க முடியவில்லை. உதாரணமாக கிறிஸ்து மதம் ஏசுவுக்கு பின் தோன்றியவை , முஸ்லிம் மதம் முகமது நபியால் உருவாக்க பட்டவை , பௌத்த மதம் புத்தருக்கு பின் தோன்றியவை அனால் நம் இந்து மதமோ இப்படி யாராலும் உருவாக்க பட்டது அல்ல.இது பல யுகங்களை கடந்து நிற்க்கிறது.

யுகங்கள் என்றால் என்ன ?

காலங்களின் அளவே யுகம் என இந்து மதங்களில் அழைக்கபடுகிறது. யுகங்கள் மொத்தம் நான்கு , அவை
1 )  க்ருதயுகம் 
2 ) திரேதாயுகம்
3 ) துவாபரயுகம்
4)  கலியுகம் 

என்பனவாகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன. இவற்றுட் சிறிய யுகமான கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது. துவாபர யுகம் கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது. இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்றுமடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.இப்பொழுது நாம் வாழும் இந்த யுகம் கலியுகம் ஆகும்.இப்படி பல யுகங்களை கடந்து வந்துள்ளது நம் இந்து மதம்.

நான்கு வேதங்கள் , உபநிதங்கள் , மற்றும் பல புராணங்கள் , சடங்கு சம்பிரதாயங்களை  கொண்டது நம் இந்து மதமாகும்.ஒவ்வொன்றும் மனிதர்களை நல் வழி படுத்த வியாசர் மற்றும் பல முனிவர்கள் மூலம் இறைவன் நமக்கு அளித்த அருள் கொடைகளாகும்.

வேதங்கள் என்றால் என்ன ?

மந்திரங்கள் மற்றும் இறை துதிபாடல்களை உள்ளடக்கியதே வேதங்கள் ஆகும்.வேதங்கள் மொத்தம் நான்கு வகை , அவை 

1 ) ரிக் வேதம்
2 ) யஜுர் வேதம்
3 ) அதர்வண  வேதம்
4 ) சாம வேதம்  என இப்படி நான்கு  வேதங்கள்  ஆகும் .


தொடரும் ........









Friday 13 May, 2011

அறிமுகம்

                                                   
அனைவருக்கும் வணக்கம் , இது நமது ஹிந்து மதத்தின் அருமையும் ,பெருமையும்  பற்றி அறிந்து கொள்ள நான் அமைத்த ஒரு சிறந்த மின்தளமாகும்.இதில் நான் கேட்டு மற்றும் படித்து அறிந்த சில ஆன்மிக தகவல்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள சிறந்த வழியாகும் என நான் நம்புகிறேன்.அப்படி இதில் நான் பகிர்ந்து கொள்ளவிருக்கும் அல்லது பகிர்த்துகொண்ட கருத்துகளில் ஏதும் பிழை இருந்தால் தயவு செய்து அதை  மன்னிக்கவும்.

இப்படிக்கு ,
சங்கர் சேட்